Friday 18 April 2014

புதிய கோள்


(18 April 2014)வான்வெளியில் தோற்றத்திலும், அளவிலும் பூமியைப் போன்று காணப்படும் புதிய கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியில் இருந்து சுமார் 490 ஒலி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கோளின் தோற்றத்தைப் பார்க்கும் போது, மிதமான வெயிலும், மிதமான குளிரும், நீர் இருப்பதற்கான ஆதாரங்களும் தெரிகின்றன.
இந்த புதிய கோளுக்கு கெப்லர் 186 எஃப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியை விட சற்று பெரியதாக, பாறைகள் நிறைந், அதிக புவிஈர்ப்பு சக்தி உள்ளதாகவும் இருக்கிறது. இது பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், இதனை மனிதன் சென்றடைவது கடினமான பணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment