TNPSC SUCCESS

நாளைய வெற்றி நமதே! உழைப்பை இடுங்கள் இன்றே! ....அன்புடன் செ.இம்மானுவேல்

Saturday, 5 April 2014

உயிரியல் முக்கிய குறிப்புகள்



மரபும் பரிணமாமும்
*  மெண்டல் தோட்டப் பட்டாணி (பைசம் சட்டைவம்) செடியில் 7 வகையான மாற்று உருவ வேறுபாடுகளை கண்டறிந்தார்.
*  ஆதி மனிதன் தோன்றியது - ஆப்பிரிக்கா
*  பாரம்பரியத் தன்மைக் கொண்டது -  மரபணு மாற்றம் செய்யப்பட்ட விந்தணு
*  இயற்கைத் தேர்வு கோட்பாட்டை வெளியிட்டவர் - சார்லஸ் டார்வின்
*  உடற்செல் ஜீன் சிகிச்சை முறை என்பது உடற்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
*  பண்பு கடத்தலில் பங்கு பெறும் மரபுப் பொருள் - னுயேயு
*  பாரம்பரிய கடத்துதலை முதன்முதலாக வெளியிட்டவர் - கிரிகர் ஜோகன் மெண்டல்
*  ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மை - அல்லீல்கள்
*  உயிரித் தொழில்நுட்ப முறையில் பெறப்படும் வைட்டமின் டி12 குணப்படுத்தும் நோய் -  பெர்னீயஸ் இரத்த சோகை.
*  உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதியை விளக்கியவர் - லாமார்க்
*  உடல் மூலச் செல்கள் எவற்றில் இருந்து பெறப்படுகிறது? - எலும்பு மஜ்ஜை
*  வைரஸ்களுக்கு எதிரான புரதம் - இன்டர்பெரான்
*  நைட்ரஜன் நிலைநிறுத்தப் பயன்படுவது - நிஃப் ஜீன்
*  டி.என்.ஏ.வின் வெட்டப்பட்ட துண்டங்களை ஒட்ட வைக்கப் பயன்படும் மூலக்கூறு பசை - னுயேயு லிகேஸ்
*  வினிகர் உற்பத்தி செய்யப் பயன்படும் அமிலம் - அசிட்டிக் அமிலம்
*  ஸ்டிராய்டுகள் - லிப்பிடுகளிலிருந்து பெறப்பட்டவைகளாகும்.
*  புற்று நோய்க்கு எதிராக பயன்படும் ஓரினச் செல் எதிர்ப்பு பொருள் - மானோ குளோனியல் எதிர்ப்புப் பொருள்.
*  இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் - பீட்டா செல்கள்.
*  இரத்த குளுக்கோஸ் அளவை கணக்கிடப் பயன்படுவது - உயிரி உணரி
*  உயிரியல் கணிப்பொறிகளை உருவாக்கப் பயன்படுவது - உயிரிச்சிப்புகள்
*  அல்லீல் என்பது ஒரே ஜீனின் மாற்றுவெளிப்பாடு ஆகும்.
*  அல்லீலோ மார்புகள் என்பது அல்லீல்களுடைய எதிர்ப்பண்பமைப்பு ஆகும்
*  ஜூன் காரணிகள் இயற்பியல் சார்ந்த பாரம்பரியக் காரணிகள் ஆகும்.
*  புறத்தோற்ற பண்புகளுக்கு பீனோடைப் என்று பெயர்
*  உடலுறுப்பு பயன்பாடு விதியை கூறியவர் - ஜீன் பாப்தீஸ் லாமார்க்
*  ரெஸ்ட்ரிகீன் எண்டோ நியூக்ளியேஸ் வரையறை நொதிகள் - னுயேயு வெட்ட உதவுகிறது
*  மூலச் செல் என்பது - (மாறுபாடு அடையாத செல் குழுமம்)
*  நீரிழிவு நோய் இன்சுலின் செலுத்துதல் மூலம் குணமடைகிறது
*  உயிரியல் வினையூக்கி என்றழைக்கப்படுபவை - நொதிகள்
*  மனித சிற்றினத்தின் பெயர் - ஹோமோசெபியன்
*  மனித முன்னோடிகள் - ஹோமினிட்டுகள்
*  னுயேயு தொழில் நுட்பம் - மரபுப் பொறியியல் என்றழைக்கப்படுகிறது.
*  மெண்டலின் ஒரு பண்பு கலப்பு விகிதம் - 3:1
நோய்தடைக்காப்பு மண்டலம்
*  சரியான நலத்தின் பரிணாமம் - தினமும் தன் கடமையினை செய்தல், மகிழ்ச்சியாக இருத்தல்.
*  சமூகத்தில் சுமூகமற்ற பரிமாணம் -  சாதாரண செயல்களிலும் கடுமையாக நடந்து கொள்ளுதல்.
*  பாக்டீரியாவால் உண்டாகும் நோய்? - இரணஜன்னி
*  காற்றின் மூலம் பரவும் நோய் -  காசநோய்
*  மிகக் கடுமையான மலேரியாக்காய்ச்சலை உருவாக்கும் கிருமி - பிளாஸ்மோடியம் பால்சிபாரம்.
*  நமது உணவுக் குடல் பகுதியில் நோய் உண்டாக்கும் நுண்ணூயிரி - எண்டமீபா ஹிஸ்டலைடிகா.
*  மறைமுகமாக நோய் பரவும்முறை -  நோயாளி பயன்படுத்தும் உடமைகள்.
*  பிற உயிரிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எதிர்பொருட்கள், மனிதருக்கு நோய் தடுப்பூசியாகப் போடப்படுகிறது. இது எவ்வகை தடுப்பூசி முறை - செயற்கையான மந்தமான நோய்த்தடுப்பு முறை
*  பிறந்த குழந்தைக்கு முதலில் கொடுக்கப்படும் நோய்த்தடுப்பூசி -
*  எதிர் தோன்றி (ஆண்டி ஜென்) இல்லாதது எது? - தாய்ப்பால்.
*  மனிதனின் இரத்த சர்க்கரை அளவு உணவுக்கு முன்னர் - 80 - 120, பின்னர் 100
*  மராசுமஸ் மற்றும் குவரியோர்கர் நோய்க்கான காரணம் - புரத குறைபாடு.
*  தோலில் மெலனின் நிறமி இல்லாமையால் தோன்றும் குறைபாடு - அல்பினோ.
*  சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸ் - ரைனோ
*  காசநோயை (எலும்புருக்கி நோய்) உருவாக்குவது - மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ்
*  டைபாய்டு நோயை உண்டாக்கும் காரணி -  சாலமெனெல்லா டைப்பி
*  மலேரியா நோயை உண்டாக்கும் காரணி - பிளாஸ்மோடியம்
*  அமீபிக் சீதபேதியை உருவாக்கும் நுண்ணுயிரி - எண்டமீயா ஹிஸ்டலைடிகா
*  எய்ட்ஸ் நோய்க்கான காரணி எச்ஐவி வைரஸ்
*  எச்ஐவியை கண்டறயும் ஆய்வு - எலைசா.
*  உடலில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் செல் - பீட்டாசெல்
*  ஆல்பா செல்கள் குளுக்கோகானை சுரக்கின்றன.
*  படர்தாமரை பூஞ்சைகளால் வரக்கூடியது.
தாவரங்களில் இனப்பெருக்கம்
*  ஒரு செல் உயிரிகளை அமீபா மற்றும் பாக்டீரியங்களில் நடைபெறும் இனப்பெருக்க வகைகளில் ஒன்று -  இரண்டாகப் பிளத்தல்
*  பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு - மகரந்தச்சேர்க்கை
*  பூஞ்சைகளில் உண்டாகும் ஒர் உட்கரு கொண்ட நகரும் திறனற்ற பாலிலா ஸ்போர்கள், கொனிடியா.
*  கருவுற்ற சூற்பை கனி ஆகும். ஒரு மலரின் பல இணையாத சூலக இலைகள் கொண்ட மேல்மட்ட சூற்பையிலிருந்து உருவாகும் கனி - திரள் கனி
*  நீரில் ஊறவைத்த விதையை அழுத்தும்போது இதன் வழியாக நீர் கசிகிறது - மைக்ரோபைல்
*  மாங்கனி கல்போன்ற கனி என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் உள்தோல் கடினமானது.
*  கருவில் வேர் உருவாகும் பகுதிக்கு முளைவேர் என்று பெயர்
*  காற்றின் மூலம் கனி பரவுதலுக்கான சரியான கூற்று - டிரைடாக்ஸ் தாவரத்தில், புல்லி வட்டம், பாப்பஸ் துவிகளாக மாறிக் கனி பரவுதலுக்கு உதவுகிறது.
*  மூவிணைவினால் உண்டாகும் சிசு, கருவில் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்க வல்லது - கருவூண்
*  தன் மகரந்த சேர்க்கையின் தீமை - விதைகள் குறைந்த எண்ணிக்கையில் உண்டாகின்றன.
*  பாலைத்தயிராக மாற்றும் பாக்டீரியா - லேக்டோ பேசிலஸ்
*  கட்டிப் போட்டால் குட்டிப்பேடும் தாவரம் - பிரையோஃபில்லம்.
*  ஹைடிராவில் நடைபெறும் இனப்பெருக்கமுறை -  அரும்புதல்
*  ஆல்காக்களில் காணப்படும் நகரும் தன்மையற்ற ஸ்போர்கள் -- ஏபிளனோஸ்போர்கள்
*  மலரின் ஆண்பாகம் - மகரந்தத்தாள் வட்டம்
*  நகரும் தன்மையற்ற ஸ்போர்கள் - கொனிடியா
*  மகரந்தப்பையிலிருந்து மகரந்த தூள்கள் சு10லக முடியை சென்றடையும் செயல் - மகரந்த சேர்க்கை
*  ஒரு மலரின் மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை சென்றடையும் நிகழ்ச்சி - ஆட்டோகேமி
*  அயல் மகரந்த சேர்க்கைக்கு மறுபெயர் - அல்லோகேமி
*  பறவைகளின் வழி மகரந்த சேர்க்கைக்கு ஆர்னிதோஃபிலி என்று பெயர்
*  முழுமையடைந்த கருவுற்ற முட்டை - சைகோட்
*  கருவுறுதலுக்குப்பின் சூல் விதை ஆகவும், சூல் உறைகள் கனி ஆகவும் மாறும்
*  கருவுற்ற முதிர்ந்த சூற்பை கனி எனப்படும்.
*  கருவுறாக் கனிகள் பார்த்தினோ கார்பிக் கனிகள் எனப்படும்.
வாழ்க்கை இயக்கக் செயல்கள்
*  மானோட்ரோபாவில் உணவுப் பொருட்கள் உறிஞ்சுவதற்கான சிறப்பான வேர்கள் - மைக்கோரைசா வேர்கள்
*  ஈஸ்ட்டின் காற்றிலா சுவாசத்தினால் உண்டாவது - எத்தனால்
*  நீர்த் தேவைக்காக தென்னையின் வேர்கள், தாய்த் தாவரத்தை விட்டு வெகு தொலைவில் உள்ளன - நீர் சார்பு இயக்கம்
*  தாவரங்களில் சைலத்தின் பணி - நீரைக்கடத்துதல்
*  தற்சார்பு ஊட்ட முறைக்கு தேவைப்படுவது -  நீர், பச்சையம், சூரியஒளி இவை அனைத்தும்
*  செல்லுக்கு வெளியே செரித்தல் நிகழும் குடல் பகுதி - லூமன்
*  ஒட்டுண்ணித் தாவரங்கள் கொண்டுள்ள சிறப்பான வேர்களுக்கு - ஹாஸ்டோரியம் என்று பெயர்
*  நொதி என்பது உயிர்கிரியா ஊக்கி
*  காற்றிலா சுவாசம் நொதித்தல் என அழைக்கப்படுகிறது.
*  ஆற்றல் நாணயம் என அழைக்கப்படுவது - யுவீ
*  மீன்கள் செவுள்கள் மூலம் சுவாசிக்கிறது.
*  தாவரக் கழிவுகள் செல்களில் சேமிக்கப்படும் இடம் - வாக்கியோல்
*  நெப்ரான் இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களை குளோமரூலஸ் மூலம் வடிகட்டுகிறது.
*  தாவரங்களில் இரவு நேரத்தில் நீர் கடத்துவதற்கு மிக முக்கியமாக கருதப்படுவது - வேரழுத்தம்.
*  நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப் பொருட்கள் - ஹார்மோன்கள்
*  வளைத்தசைப் புழுக்களில் சிறப்புக் கழிவு நீக்க உறுப்பாக செயல்படுவது - நெப்ரீடியங்கள்
*  ஒட்டுண்ணித் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு -விஸ்வம்இகஸ்குட்டா
*  சர்க்கரைக்கரைசல் ஆல்கஹாலாக மாறும் நிகழச்சி -  நொதித்தல்
*  நொதித்தலில் ஈடுபடும் நுண்ணுயிரி - ஈஸ்ட்
சுற்றுச் சூழல் பாதுகாப்பு
*  சிதைவடையும் பொருட்களைக் கொண்ட தொகுப்பு - புல், மலர்கள், தோல்
*  உணவுச் சங்கிலி - புல், ஆடு, மனிதன்
*  கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவது - பெட்ரோலியம்
*  பசுமை வேதியியலினால் உண்டாகும் பொருளுக்கு எடுத்துக்காட்டு - உயிரி பிளாஸ்டிக்
*  கார்பன்-டை-ஆக்சைடு பசுமையக வாயு வெப்பநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமாதலை ஏற்படுத்துகிறது.
*  பாக்டீரியங்கள் குளச் சூழ்நிலை தொகுப்பில் சிதைப்பவைகள் ஆகும்.
*  மேகங்களைத் தூண்டி செயற்கை மழை பெய்ய உதவும் வேதிப்பொருள் - பொட்டாசியம் அயோடைடு
*  படிம எரிபொருளுக்கு எடுத்துக்காட்டு -  கரி
*  கழிவுத் தாளை மீண்டும் எத்தனை சதவீதம் பயன்படுத்த முடியும் -  54 சதவீதம்.
*  உப்பு நீரை குடிநீராக மாற்ற பயன்படுத்தப்படும் இயற்பியல் முறை - தலைகீழ் சவ்வூடு பரவல்
*  ஹாலஜன் இல்லாத தீயணைப்பான்களில் பயன்படும் பொருள் - சிலிகான் சார்ந்த பொருள்
*  ஆசிய சிங்கம் காணப்படும் சரணாலயம் - கிர்தேசியப்பூங்கா
*  எண்ணெய் கசிவினால் கடல்நீர் மட்டத்தில் மிதக்கக் கூடிய எண்ணெய் சிதறல்கள் - தார்பந்துகள்.

*  ஜோகன் மெண்டல் - பாரம்பரிய கடத்தல்
*  பட்டாணிச் செடி - பைசம் சட்டைவம்
*  எட்வர்ட் ஜென்னர் - தடுப்பூசி
*  டாக்டர் ஐயர்ன் வில்மூட் - டாளி
*  உடல் செல்களில் ஏற்படும் மாறுபாடுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை.
*  ஊயிரிகளில் புறஅமைப்பின் மாறுபாடுகள் வேறுபாடுகளை உருவாக்குகிறது.
*  லாமார்க் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தை எடுத்துக்காட்டாக கொடுக்க காரணம் - ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து மூலம் அதிகப் பயன்பாட்டில் இருக்கும் உறுப்புகள் *  வளர்ச்சியுறும் என்பதை விளக்கினார். இம் மாற்றத்திற்கு காரணமாக விளங்குவது  தேவையும் எண்ணமுமே ஆகும்.
*  ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மைக்கு அல்லீல்கள் என்று பெயர்.
*  அல்லீல்கள் வெளிப்படுத்தும் பண்பிற்கு அல்லிலோ மார்புகள் என்று பெயர்.
*  ஆதிமனிதன் முதல் தற்கால மனிதன் வரை கொடுக்கப்பட்ட மனித இனங்களை வரிசைப்படுத்துக:
1. ஹோமியோ ஹேபிலஸ் 2. ஹோமியோ எரக்டஸ் 3. நியான்டர்தால் மனிதர்கள் 4. ஹோமோசெபியன்
*  கணையம் நொதிகளையும், ஹார்மோனையும் சுரக்கின்றது
*  தைராக்ஸின் - ஆளுமைஹார்மோன்
*  அட்ரீனலின் - அவசரக்கால ஹார்மோன்
*  ஆல்பாசெல்கள் குளுக்கோகான் ஹார்மோனையும், பீட்டாசெல்கள் இன்சுலின் ஹார்மோனையும் சுரக்கின்றன.
*  குன்றல்பகுப்பு நடைபெறும் செல்கள் இனப்பெருக்க எபிதீலிய செல்கள்
*  அமீபாவில் நடைபெறும் செல்பகுப்புமுறை - குரோமோசோம் வலைபின்னலில் மாற்றங்களை ஏற்படுத்துவது இல்லை.
*  மியாஸிஸ் செல்பிரிதலின் குறுக்கே கலத்தல் நடைபெறும் நிலை - பாக்கிடீன்
*  பிட்யூட்டரி சுரப்பி நாளமில்லா குழுவின் நடத்துநர்
*  சில நாளமில்லாச் சுரப்பிகளை பிட்யூட்டரி சுரப்பி ஒழுங்குபடுத்துகிறது.
*  பெரு மூளையின் பணிகள் - உணர்வு, அறிவுக்கூர்மை, நினைவாற்றல், கற்பனைத்திறன், காரணகாரியம், ஆய்ந்தறிதல் போன்றவற்றின் இருப்பிடமாக திகழ்கிறது.
*  தைராக்ஸின் பணிகள் - உடலின் வெப்பத்தை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்ற வீதத்தை உயர்த்துகிறது.
*  அட்ரீனல் ஹார்மோன்களின் பணிகள் - இதயத்துடிப்பின் வேகத்தை அதிகரிக்கின்றன. சுவாசவீதத்தை அதிகரிக்கின்றன.
*  ரிலாக்ஸினின் பணி - மகப்பேறின்போது இடுப்புப் பகுதித் தசைகளைத் தளர்வடையச் செய்து குழந்தை பிறப்பை எளிதாக்குகிறது.
*  உடலின் மாஸ்டர் கெமிஸ்ட் என்று சிறுநீரகம் அழைக்கப்படுவதற்கான காரணம்: சிறுநீரகம் இரத்தத்தின் வேதிபொருட்களின் சமநிலையை பேணுகிறது.
*  வெட்டும்பற்கள் - யானையின் தந்தம்
*  ரோமம் - முள்ளம்பன்றியின் முட்கள்
*  குளிரை தாங்குவதற்காக தடித்த தோலும் அடர்த்தியான முடியையும் துருவக்கரடிகள் பெற்றுள்ளன.
*  உணர்மீசா ரோமங்கள் காணப்படும் விலங்கு பூனை மற்றும் நாய்
*  மிட்ரல்வால்வு இடதுஆரிக்கிள், இடது வெண்ட்ரிக்கிள் இடையில் காணப்படுகிறது.
*  ஈரிதழ் மற்றும் மூவிதழ் வால்வின் பயன்: இரத்தம் பின்னோக்கிச் செல்வதைத் தடுத்தல்.
*  கார்டியாக் தசையினால் மனித இதயம் சுருங்கி விரிகிறது.
*  சராசரி மனிதனின் இதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 72 துடிப்புகளாகும்.
*  இதயத்தின் அறை சுருங்கும் நிலை - சிஸ்டோல்
*  இதயத்தின் அறை விரிவடையும் நிலை - டயஸ்டோல்
*  பறக்கும் தன்மையுள்ள பாலூட்டிகள் - வெளவால்
*  கடலில் வாழும் பாலூட்டிகள் டால்பின், திமிங்கலம், பென்குவின்
*  சிறுநீரகம் வெளியேற்றும் கழிவு - சிறுநீர். கழிவுப் பொருட்கள் - யூரியா, யூரிக் அமிலம்
*  நுரையீரல் வெளியேற்றும் கழிவு - வெளியேற்றப்படும் காற்று - கழிவுப்பொருட்கள் - கார்பன்டைஆக்ஸைடு, நீர் ஆவியாதல்
*  தோல் வெளியேற்றும் கழிவு - வியர்வை. கழிவுப் பொருட்கள் - அதிகமான நீர் மற்றும் உப்புகள்.
*  சுவாசித்தலில் குளுக்கோஸ் என்பது 6 கார்பன் கொண்ட சேர்மம்.
*  லாக்டிக் அமிலம் என்பது 3 கார்பன் கொண்ட கரிமச்சேர்மம்.
*  தொட்டல் சிணுங்கி - வளர்ச்சி சாரா இயக்கம்
*  தொட்டல் சிணுங்கி தாவரத்தின் நரம்பு மண்டலமோ தசைகளோ இல்லை. ஆனால் இத்தாவரத்தை தொட்டால் அனைத்து இலைகளும் சுருங்குவதற்கு காரணம் தாவரச் *  செல்களில் உள்ள நீரின் அளவில் ஏற்படும் மாறுதல் மேலும் தூண்டிலுக்கு உடனே பதில் வினை.
*  மனிதனின் சுவாக் காற்றானது நாசித்துளை வழியாக நுறையீரலுக்குள் செல்கிறது.
*  மீன்களில் நீரானது வாய் வழியாக உடலுக்குள் சென்று நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் செவுளுக்குள் பரவுகிறது.
*  சிதைவடையும் கழிவு - தோல்
*  சிதைவடையாக் கழிவு - நெகிழி
*  இராணுவ கழிவு - நிலத்தில் நிரப்புதல்
*  திரவ கழிவு - ஆழ்கிணறு பாய்ச்சுதல்
*  மருத்துவ கழிவு - எரித்து சாம்பலாக்குதல்
*  பொட்டாசியம் அயோடைடு - மேகத்தில் தூவுதல்
*  கருப்புத் தங்கம் - பெட்ரோல்
*  நெகிழி நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினால் சிதைவடையாது. எனவே இது மட்காத கழிவு ஆகும்.
*  மரக்கட்டை நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினால் சிதைவடையும் எனவே இது மட்கும் கழிவு ஆகும்.
*  கதிர்வீச்சு கழிவுகளை எரித்தல் மூலமும், நிலத்தில் நிரப்புதல் மூலமும் பாதுகாக்கப்படுகிறது.
*  நிலக்கரியை எரிக்கும்போது வெளிவரும் பசுமையக வாயு வெப்பநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
*  பசுமையக வாயுவிற்கு உதாரணம் - கார்பன்டை ஆக்சைடு
*  பசுமையாக வாயு வெளிவருவதால் காலநிலை மாறுபாட்டிற்கும், புவி வெப்பமாதலுக்கும் காரணமாகிறது.
*  ஆற்றல் உணவு மூலம் ஒரு உயிரியிலிருந்து அடுத்தடுத்த உயிரிகளுக்கு கடத்தப்படுதல் உணவுச் சங்கிலி எனப்படும்.
*  உயிரி பிளாஸ்டிக் - மக்காச் சோளம் உருளைக்கிழங்கு மற்றும் தாவரப் பொருள்களிலிருந்து தயார்க்கும் பிளாஸ்டிக் பொருள்கள்.
*  படிம எரிப்பொருள் - நிலக்கரி
*  பயோ டீசல் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது - தாவர எண்ணெய் மற்றும் கொழுப்பு
*  பயோ ஆல்கஹால் என்பது - உயிரி எரி சாராயம்
*  நச்சுத்தன்மையற்ற பாதுகாப்பான ஒரு எரிப்பொருள் - ஹைட்ரஜன்
*  மீத்தேன் வாயுவிலிருந்து உரங்கள் தயாரிக்கப்படுகிறது.
*  திட,திரவ வாயு நிலையில் உள்ள ஹைட்ரோ கார்பன் - பெட்ரோலியம்
*  நீரினால் உண்டாகும் நோய் - டைபாய்டு, காலரா, சீதபேதி
*  படிந்த மற்றும் மிதக்கும் பொருட்களை எந்த சுத்திகரிப்பு முறையில் நீக்கலாம் - முதல் நிலை சுத்திகரிப்பு
*  திரும்ப பெற இயலாத வளம் - கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு
*  சதுப்பு நிலங்களில் மீத்தேன் வாயு காணப்படுகிறது.
*  யுரேனியத்திலிருந்து அணுக்கரு ஆற்றல் தயாரிக்கப்படுகிறது.
*  டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா நோய்கள் கொசுக்களின் மூலம் பரவுகின்றன.
*  ஆற்றல் சேமிக்க உதவும் சாதனங்கள் - ஒளிரும் பல்புகள், சூரிய நீர் சூடேற்றி, மின்னணு மின் அட்டை
*  இயற்கை வளங்கள் புதுப்பிக்கத்தக்க வளங்கள்.
*  வைட்டமின்கள் - ஆற்றலை அளிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப்படுத்துகிறது.
*  நொதிகள் - ஆல்கஹால் தயாரிக்க பயன்படுகிறது.
*  கரிம அமிலங்கள் - வினிகர் உற்பத்தி செய்ய அசிட்டிக் அமிலம் பயன்படுகிறது.
*  மூலச்செல்கள் வகைகள்: 1. கருவின் மூலச்செல்கள் 2. முதிர்ந்த அல்லது உடல்மூலச்செல்கள்
*  ஸ்டெம் செல்கள் சிறப்படையாத செல்கள், மைட்டாசிஸ் முறையில் பிளவுற்று அதிக செல்களை உருவாக்கும் தன்மை கொண்டது.
*  மூலச்செல்கள் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யும் தன்மை கொண்டது. எ.கா: இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்கள்.
*  மூலச்செல்கள் - ஆய்வகத்தில் உடலுக்கு வெளியே செயற்கை முறையில் கரு உருவாக்கப்பட்டு அக்ருவில் இருந்து பெறுதல்.
*  உடல்மூலச்செல் - மனிதன் மற்றும் உயர்விலங்குகளி ல் இணைப்புத் திசு, தசைச்திசு, எலும்புமஞ்சை போன்ற வேறுபாடு அடைந்த செல்களில் உள்ள வேறுபாடு அடையாத செல்களை பிரித்து பெருகச் செய்து கிடைப்பது.
*  அக்டோபர் 15 கைகழுவும் நாளாக கொண்டாடப்படுகிறது.
கல்விசோலை உயிரியல்( click here)
ttnpsc important website ( click here)
பள்ளிசோலை ( click here)

Posted by immanuvel devipattinam at 13:57 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

சில பயனுள்ள இணையதளங்கள்









  • payanulla inaya thalangal
    சான்றிதழ்கள் 1) பட்டா / சிட்டா அடங்கல்
    http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta
    2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
    http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
    3) வில்லங்க சான்றிதழ்
    http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
    4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
    http://www.tn.gov.in/appforms/birth.pdf
    http://www.tn.gov.in/appforms/death.pdf
    5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
    http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
    6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
    http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
    C. E-டிக்கெட் முன் பதிவு
    1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
    http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
    http://www.irctc.co.in/
    http://www.yatra.com/
    http://www.redbus.in/
    2) விமான பயண சீட்டு
    http://www.cleartrip.com/
    http://www.makemytrip.com/
    http://www.ezeego1.co.in/
    D. E-Payments (Online)
    1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
    http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx
    2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
    https://www.oximall.com/
    http://www.rechargeitnow.com/
    http://www.itzcash.com/
    3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
    http://www.itzcash.com/
    https://www.oximall.com/
    http://www.rechargeitnow.com/
    4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
    5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
    http://www.ebay.co.in/
    http://shopping.indiatimes.com/
    http://shopping.rediff.com/shopping/index.html
    6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
    http://www.icicidirect.com/
    http://www.hdfcsec.com/
    http://www.religareonline.com/
    http://www.kotaksecurities.com/
    http://www.sharekhan.com/
    E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
    1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
    https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118
    http://www.indianbank.in/education.php
    http://www.iob.in/vidya_jyothi.aspx
    http://www.bankofindia.com/eduloans1.aspx
    http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp
    http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp
    http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm
    2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
    http://www.tn.gov.in/dge/
    http://www.tnresults.nic.in/
    http://www.dge1.tn.nic.in/
    http://www.dge2.tn.nic.in/
    http://www.Pallikalvi.in/
    http://www.results.southindia.com/
    http://www.chennaionline.com/results
    3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
    http://www.tn.gov.in/dge
    4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
    http://www.classteacher.com/
    http://www.lampsglow.com/
    http://www.classontheweb.com/
    http://www.edurite.com/
    http://www.cbse.com/
    5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
    http://www.kalvisolai.com/
    6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
    http://www.tnpsc.gov.in/
    http://www.tnpsctamil.in/
    http://www.upsc.gov.in/
    http://upscportal.com/civilservices/
    http://www.iba.org.in/
    http://www.rrcb.gov.in/
    http://trb.tn.nic.in/
    http://www.tettnpsc.com/
    7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
    http://www.employmentnews.gov.in/
    http://www.omcmanpower.com/
    http://www.naukri.com/
    http://www.monster.com/
    .இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
    http://www.ssbrectt.gov.in/
    http://bsf.nic.in/en/career.html
    http://indianarmy.nic.in/
    9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
    http://nausena-bharti.nic.in/
    10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
    http://www.skype.com/
    http://www.gmail.com/
    http://www.yahoochat.com/
    http://www.meebo.com/
    F. கணினி பயிற்சிகள் (Online)
    1) அடிப்படை கணினி பயிற்சி
    http://www.homeandlearn.co.uk/
    http://www.intelligentedu.com/
    http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html
    2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
    http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html
    3) இ – விளையாட்டுக்கள்
    http://www.zapak.com/
    http://www.miniclip.com/
    http://www.pogo.com/
    http://www.freeonlinegames.com/
    http://www.roundgames.com/
    4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
    http://www.google.com/
    http://www.wikipedia.com/
    http://www.hotmail.com/
    http://www.yahoo.com/
    http://www.ebuddy.com/
    http://www.skype.com/
    G. பொது சேவைகள் (Online)
    1) தகவல் அறியும் உரிமை சட்டம்
    http://rti.gov.in/
    http://www.rtiindia.org/forum/content/
    http://rti.india.gov.in/
    http://www.rti.org/
    2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
    http://www.incredibleindia.org/
    http://www.india-tourism.com/
    http://www.theashokgroup.com/
    http://www.smartindiaonline.com/
    3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
    http://www.tamilmatrimony.com/
    http://kalyanamalai.net/
    http://www.bharatmatrimony.com/
    http://www.shaadi.com/
    4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
    http://www.tamilcube.com/
    5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
    http://www.koodal.com/
    http://freehoroscopesonline.in/horoscope.php
    6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
    http://www.way2sms.com/
    7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்
    http://www.youtube.com/
    இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
    http://www.justdial.com/
    9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
    http://www.dinamalar.com/
    http://www.dinamani.com/
    http://www.dailythanthi.com/
    http://www.tamilnewspaper.net/
    http://www.vikatan.com/
    http://www.puthiyathalaimurai.com/
    http://www.nakkheeran.in/
    10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
    http://puthiyathalaimurai.tv/new/
    http://www.bbc.co.uk/
    11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
    http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx
    12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
    http://www.indiapost.gov.in/tracking.aspx
    H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய
    1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
    http://www.filehippo.com/
    I. வணிகம் (Economy)
    1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
    http://www.goldenchennai.com/
    http://www.rates.goldenchennai.com/
    http://www.bullionrates.in/p/live-bullion-rates.html
    2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
    http://www.gocurrency.com/
    http://www.xe.com/
    H. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)
    1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
    http://www.passport.gov.in/
    2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
    http://www.tn.gov.in/services/employment.html
    J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)
    1) குடும்ப அட்டை
    http://www.tn.gov.in/appforms/ration.pdf
    2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
    http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf
    3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
    http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf
    4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
    http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf
    5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
    http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf
    http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf
    6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்
    http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf
    7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்
    http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc
    http://www.tnreginet.net/english/Applforms/compulsory_marriage/Comp_Marriage_Application_Tamil.pdf
    பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்
    http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf
    K. விவசாய சந்தை சேவைகள் (Online)
    1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்
    http://agmarknet.nic.in/
    2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி
    http://indg.in/agriculture/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/
    3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்
    http://nhb.gov.in/OnlineClient/categorywiseallvarietyreport.aspx
    4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்
    http://indg.in/agriculture/major-traders-database/
    5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்
    http://indg.in/agriculture/database-of-growers-federations-farmers-associations-in-tamil-nadu/
    6) கொள்முதல் விலை நிலவரம்
    http://www.tnsamb.gov.in/price/login.php
    7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்
    http://www.tnsamb.gov.in/mktcom.php
    தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்
    http://59.90.246.98/pricelist/
    9) வானிலை செய்திகள்
    http://services.indg.in/weather-forecast/
    L. தொழில் நுட்பங்கள்
    1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்
    http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_index_ta.html
    http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html
    2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்
    http://www.tnagrisnet.tn.gov.in/website/availabilityReports.php?type=Seed
    3) உயிரிய தொழில்நுட்பம்
    http://www.agritech.tnau.ac.in/ta/bio_tech/biotech_ta.html
    4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்
    http://www.agritech.tnau.ac.in/ta/post_harvest/post_harvest_ta.html
    5) உயிரி எரிபொருள்
    http://www.agritech.tnau.ac.in/ta/bio_fuels/bio_fuels_ta.html
    M. வேளாண் செய்திகள்
    1) பாரம்பரிய வேளாண்மை
    http://www.agritech.tnau.ac.in/ta/itk/indi_farm_ta.html
    http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html
    2) வளம்குன்றா வேளாண்மை
    http://www.agritech.tnau.ac.in/ta/sustainable_agri/susagri_ta.html
    3) பண்ணை சார் தொழில்கள்
    http://www.agritech.tnau.ac.in/ta/farm_enterprises/farm_enter_ta.html
    4) ஊட்டச்சத்து
    http://www.agritech.tnau.ac.in/ta/nutrition/nutrition_ta.html
    5) உழவர்களின் கண்டுபிடிப்பு
    http://www.agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations.html
    N. திட்டம் மற்றும் சேவைகள்
    1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்
    http://www.tnrd.gov.in/schemes_states.html
    2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்
    http://www.agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schemes_ta.html
    3) வட்டார வளர்ச்சி
    http://www.agritech.tnau.ac.in/ta/dev_blocks/indextnmap_ta.html
    4) வங்கி சேவை & கடனுதவி
    http://www.agritech.tnau.ac.in/ta/banking/credit_bank_ta.htm
    5) பயிர் காப்பீடு
    http://www.agritech.tnau.ac.in/ta/crop_insurance/crop_ins_ta.html
    6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)
    http://www.agritech.tnau.ac.in/ta/kvk/kvk_ta.html
    http://www.agritech.tnau.ac.in/ta/atma/atma_ta.html
    7) NGOs & SHGs
    http://www.agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_ta.html
    அக்ரி கிளினிக்
    http://www.agriclinics.net/
    9) கிசான் அழைப்பு மையம்
    http://www.agritech.tnau.ac.in/ta/kisan/kisan_ta.html
    10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்
    http://www.agritech.tnau.ac.in/ta/mdg/mdg_ta.html
    11) கேள்வி பதில்
    http://www.agritech.tnau.ac.in/ta/faq_ta.html
    12) பல்கலைக்கழக வெளியீடுகள்
    http://www.agritech.tnau.ac.in/ta/tnau_publications/tnau_publish_ta.html
    O. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்
    1) தோட்டக்கலை
    http://www.agritech.tnau.ac.in/ta/horticulture/horti_index_ta.html
    2) வேளாண் பொறியியல்
    http://www.agritech.tnau.ac.in/ta/agrl_engg/agriengg_index_ta.html
    3) விதை சான்றிதழ்
    http://www.agritech.tnau.ac.in/ta/seed_certification/seedcertification_index_ta.html
    4) அங்கக சான்றிதழ்
    http://www.agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_index_ta.html
    5) பட்டுபுழு வளர்பு
    http://www.agritech.tnau.ac.in/ta/sericulture/seri_index_ta.html
    6) வனவியல்
    http://www.agritech.tnau.ac.in/ta/forestry/forestry_tamil_index.html
    7) மீன்வளம் மற்றும் கால்நடை
    http://www.agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.html
    தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்
    http://services.indg.in/weather-forecast/
    9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்
    http://www.tnsamb.gov.in/seedcomp.html
    http://www.tnsamb.gov.in/fertilizers.html
    10) உரங்களின் விலை விபரம்
    http://www.tnagrisnet.tn.gov.in/website/FertilizerPrice.php
    P. போக்குவரத்து துறை
    1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு
    http://www.tn.gov.in/appforms/form2.pdf
    2) புகார்/கோரிக்கைப் பதிவு
    http://transport.tn.nic.in/transport/registerGrievanceLoad.do
    3) வாகன வரி விகிதங்கள்
    http://www.tn.gov.in/sta/taxtables.html
    4) புகார்/கோரிக்கை நிலவரம்
    http://transport.tn.nic.in/transport/grievance_statusLoad.do
    5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு
    http://tnsta.gov.in/transport/transportTamMain.do
    6) தொடக்க வாகன பதிவு எண்
    http://transport.tn.nic.in/transport/rtoStartNoListAct.do



மேலும் பயனுள்ள இணயதளங்கள் (  click here)
Posted by immanuvel devipattinam at 12:12 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

TNPSC முக்கிய பகுதிகள்

முக்கிய பகுதிகள் ( click here )

Posted by immanuvel devipattinam at 07:31 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

VAO இன் பணிகளும் கடமைகளும்


 கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகள் மற்றும் கடமைகள்
பகுதி நேர கிராம அலுவலர்களுக்கு மாற்றாக முழு நேர கிராம நிர்வாக அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்ட பின்னர் இவர்களுக்கான பணிகள் மற்றும் கடமைகள் குறித்தான விவர அட்டவணை ஒன்று அரசாணை எண் 581, நாள்: 3-4-1987-ல் நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டது. அதன்படி கீழ்க்கண்ட கடமைகளைச் செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் பொறுப்பானவர்கள் ஆவார்கள்.
1. கிராமக் கணக்குகளைப் பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.
2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்குச் சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.
3. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்புச் சான்று ஆகியவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.
4. பொதுமக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலிருந்து கடன்கள் பெற சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்கள் வழங்குதல்.
5. பிறப்பு, இறப்பு பதிவேடுகளைப் பராமரித்தல்.
6. தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின்போது உடனுக்குடன் மேல் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்புதல் மற்றும் இயற்கை இன்னல்களால் ஏற்பட்ட சேதத்தை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடும் போது உதவி செய்தல்.
7. கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தல் மற்றும் விசாரணைக்கு உதவி செய்தல்.
8. காலரா, பிளேக் மற்றும் கால்நடை நோய்கள் போன்ற தொற்று நோய்கள் பற்றி அறிக்கை அனுப்புதல்.
9. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.
10. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.
11. புதையல் பற்றி மேல் அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்தல்.
12. முதியோர் ஓய்வூதியம் வழங்குவது குறித்தான பணிகளைக் கவனித்தல்.
13. பொதுச் சொத்துக்கள் பற்றிய பதிவேட்டைப் பராமரித்தல்.
14. முதியோர் ஓய்வூதியப் பதிவேட்டைப் பராமரித்தல்.
15. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்குத் தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைத்தல்.

இது தவிர கிராம நிர்வாக அலுவலர்கள் கீழ்க்கண்ட பணிளும் செய்ய கடமைப்பட்டவர்களாவார்கள்:
16. கிராமப் பணியாளர்களுடைய பணியினை கண்காணிப்பது.
17. நில ஆக்கிரமிப்புகளைத் தடுப்பது மற்றும் மேல் அலுவலர்களுக்குத் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுப்பது.
18. சர்வே கற்களை பராமரிப்பது, காணாமல் போன கற்களைப்பற்றி அறிக்கை அனுப்புதல்.
19. கிராமத்தில் நிகழும் சமூகவிரோத செயல்கள் குறித்தான அறிக்கை அனுப்புதல்.
20. குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் சந்தேகத்திற்கிடமான அந்நியர்கள் வருகையை தெரிவிப்பது.
21. வருவாய்த் துறை அலுவலர்களுக்கும் மற்ற துறை அலுவலர்களுக்கும் ஒத்துழைப்பு அளித்தல்.
22. சட்ட-ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதன் மூலம் குற்றங்களை தடுத்தல், குற்றங்கள் நடந்த உடனே அறிக்கை அனுப்புதல், சட்ட-ஒழுங்கு பேணுவதற்காக கிராம அளவில் அமைதி குழு கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல்.
23. கள்ளத்தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்புகளைத் தடுப்பது குறித்து அறிக்கை அனுப்புதல்.
24. தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகள் செய்வது.
25. கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரங்களைச் சேகரிப்பதில் ஒத்துழைத்தல்.
26. அரசு அவ்வப்போது தொடங்கும் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.
27. மனு நீதி நாள் நிகழ்ச்சி நடத்த வட்டாட்சியருடன் ஒத்துழைத்தல். நிலப் பட்டா, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை வழங்குதல், மனுக்கள் மீது அறிக்கை அனுப்ப உரிய ஆவணங்களைத் தயாரித்தல்.
28. பாசன ஆதாரங்களைக் கண்காணித்தல் -  ஏரிகளிலும் நீர்வழங்கும் பாசனக் கால்வாய்களிலும் ஆக்கரமிப்புகள் இல்லாமல் தடுப்பது - அவற்றை முறையாக பராமரித்தல்.
29. கிராம அளவில் மூன்று வருடங்களுக்கு விற்பனை புள்ளி விவரங்கள் (Sale Statistic Register)  எடுத்து ஒரு பதிவேடு நாளது வரை பராமரித்தல்.
30. பதிவு மாற்றம் (Transfer of Registry) அதற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை நாளது வரையில் பராமரித்தல்.
31. நிலப் பதிவேடுகளைக் கணினிமயமாக்குதலுக்குண்டாண (Computerisation) பணிகளில் ஒத்துழைப்பு கொடுப்பது.
32. அரசு ஆணை எண் 212, வருவாய்த் துறை, தமிழ்நாடு 29-4-1999-ன்படி நாட்குறிப்பு பராமரித்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.
33. கிராம அளவில் கடன் பதிவேடு (Loan Ledgers) மற்றும் இதர வசூல் கணக்குகளைப் பராமரித்து இது சம்பந்தமாகக்க காலாண்டுக்கு ஒரு முறை வட்ட கணக்குகளுடன் சரிபார்த்தல்.
34. கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அறிக்கை அனுப்புதல்.
35. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.
36. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.
35. உயர் அலுவலர்கள் அவ்வப்போது இடும் பணிகளைச் செய்வது.
Posted by immanuvel devipattinam at 07:25 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

இந்திய அரசியலமைப்பு பற்றிய செய்திகள்




இந்தியா  இறையாண்மையுள்ள (Sovereign), சமதர்ம (Socialist), சமயச்சார்பற்ற  (Secular), மக்களாட்சிக் (Democratic)  குடியரசு (Republic).
 இறையாண்மை என்பது இந்தியாவின் உள்நாட்டு, வெளிநாட்டு விஷயங்களில் பிற நாடுகள் தலையிடாவண்ணம் இந்தியா பெற்றுள்ள சுதந்திரமான ஆற்றலைக் குறிக்கும்.
 ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அனைவரும் சமவாய்ப்பு பெறுவதே சமதர்மம்.
 அரசு எந்த மதத்தையும் சார்ந்ததல்ல என்பதே சமயச்சார்பின்மை.
 உலகின் மிகப் பெரிய எழுதப்பட்ட அரசமைப்பான இந்திய அரசமைப்பு 395 உறுப்புகளைக் (Articles ) கொண்டது.
 முகவுரை (Preamble), 22 பகுதிகள் (Parts), 12 அட்டவணைகள் (Schedules) கொண்டது.
 மாறிவரும் காலத்திற்கேற்ப இந்திய அரசமைப்பு 98 முறைகள் (2013 வரை) திருத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்பு வரலாறு
 இந்தியர்களுக்கு அரசமைப்பு எழுதும் ஆற்றல் இல்லை என்ற லார்ட் பிர்ஹன்வுட்டின் சவாலுக்கு எதிராக, 1928-ல் நேருவின் அறிக்கை வெளியிடப்பட்டது.
 இந்தியாவுக்கென தனி அரசியல் அமைப்புச் சட்டம் என்ற கருத்தை முன்வைத்தவர் எம்.என்.ராய்.
நேரு அறிக்கை (1928) மோதிலால் நேருவால் தயாரிக்கப்பட்டது.
 நேரு அறிக்கையில் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து கோரப்பட்டது.
டொமினியன் அந்தஸ்து என்பது பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுயாட்சி.
 ஜவஹர்லால் நேரு, நேதாஜி போன்றோர் முழு விடுதலை கோரலாம் என்றார்கள்.
 முழு விடுதலைத் தீர்மானத்தை, 1929-ல் கொண்டு வரலாம் என்றார் காந்திஜி.
 அமைச்சரவை தூதுக்குழு (1946) அறிவுரைப்படி இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது.
 அமைச்சரவை தூதுக்குழுவின் தலைவராக இருந்தவர் சர் பெத்திக் லாரன்ஸ்.
 அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
 டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்ட்ராவிலிருந்து அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கபட்டார்.
 அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் சச்சிதானந்த சின்ஹா.
 அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் டிசம்பர் 9, 1946-ல் நடைபெற்றது.
 அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .
 அரசியலமைப்புக்கான குறிக்கோள் தீர்மானம் ஜனவரி 22, 1947-ல் நேருவால் முன்மொழியப் பட்டது.
 அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுத் தலைவர் டாக்டர் அம்பேத்கர்.
 அரசமைப்புச் சட்டம் 1948 பிப்ரவரியில் தயாரானது.
 அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949.
 அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளே இந்திய சட்ட தினம்.
 அரசமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட நாள் ஜனவரி 26, 1950.
 அரசமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட நாளே இந்திய குடியரசு தினம்.
 அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் 299 பேர்.
 2 ஆண்டுகள் 11 மாதம் 18 நாட்கள் அரசியல் அமைப்பு சபை கூடி விவாதித்து அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது.
 இந்திய அரசமைப்பு சட்டத்தை வடிவமைத்தவர் அம்பேத்கர் என்பது அனைவரும் அறிந்ததே. அரசமைப்புச் சட்டத்தை தன் கைப்பட முழுவதுமாக எழுதியவர் பிரேம் பெஹாரி நரேன் சக்ஸேனா. அரமைப்பு சட்டத்தை எழுதி முடிக்க ஆறு மாத காலம் ஆனது.
 அரசமைப்புச் சட்ட கையெழுத்துப் பிரதிகள் புகைப்படமாக்கப்பட்டு டேராடூனில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது.
 1950 ஜனவரி 26-ஆம் நாள் இந்திய குடியரசு மலர்ந்தபோது அரசியல் அமைப்பு சபை நாடாளுமன்றமாக மாறியது, அதன் தலைவர் இந்திய குடியரசுத்தலைவரானர் 50 ஆண்டுகளுக்குப் பின் எம்.என்.வெங்கடாசலய்யா தலைமையில் அரசியலமைப்புச் சட்ட செயல்பாடு பற்றி அறிய குழு அமைக்கப்பட்டது.
முகவுரை
 முகவுரை அரசமைப்பின் அடிப்படை தன்மை மற்றும்  நோக்கங்களைச் சுருக்கமாகக் காட்டுகிறது.
 அரசமைப்பின் முகவுரை 1946 டிசம்பர் 13-ல் ஜவஹர்லால் நேருவால் தீர்மானமாகக் கொண்டுவரப்பட்டு அரசியல மைப்பு நிர்ணய சபையால் 1947 ஜனவரி 22-ல் ஏற்றுக்கொள்ளப் பட்டது.
 இந்திய அரசமைப்பு 22 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. எனினும் முகவுரை அப்பகுதிகளுக்குள் இடம்பெறவில்லை.
 இந்திய அரசமைப்பின் முகவுரை அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்திலிருந்து வடிவமைக்கப்பட்டது.
 முகவுரை 1976-ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை திருத்தப்பட்டது. 42 வது அரசமைப்புதிருத்தத்தின் படி சோசியலிஸ்ட், மதச்சார்பற்ற, ஐக்கிய போன்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டது.
முகவுரையின் வாசகங்கள்
 இந்திய அரசமைப்பிலுள்ள முகவுரை கீழ்க்கண்ட வாசகங்களைக் கொண்டுள்ளது.
 இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை ஓர் இறையாண்மையுள்ள (soverign), சமதர்ம(socialist), சமயச்சார்பற்ற (secular), மக்களாட்சிக் குடியரசாக (Demacratic Republic) உருவாக்க உறுதி ஏற்கிறோம்.
 இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமுதாய பொருளாதார அரசியல் நீதியும், எண்ணம், கருத்து வெளியீடு, நம்பிக்கை, மதப்பற்று, மதவழிபாடு ஆகியவற்றில் சுதந்திரமும், தகுதி மற்றும் வாய்ப்பில் சமத்துவமும் கிடைக்கவும் மக்களிடையே தனிமனித மாண்பையும் நாட்டின் ஒற்றுமையையும் வளர்க்கவும் நமது அரசியல் நிர்ணய சபையில் உறுதி கொண்டு 1949 நவம்பர் 26ம் நாளான இன்று நமக்கு நாமே இந்த அரசியலமைப்பை நிறைவேற்றி அளித்து நடைமுறைப்படுத்துகிறோம்.
 முகவுரை இந்திய அரசமைப்பின் ஒரு பகுதியா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றம் இரு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. பெருபாரி (எதிர்) இந்திய ஒன்றியம் (1960) வழக்கில் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியல்ல எனத் தீர்ப்பளித்தது. ஆனால் கேசவ பாரதி (எதிர்) இந்திய அரசு (1973) வழக்கில் முகவுரை அரசமைப்பின் ஒரு பகுதி எனத் தீர்ப்பளித்துள்ளது.
பகுதிகள் மற்றும் உறுப்புகள்  ( Parts & Articles)
 பகுதி I - இந்திய அரசின் எல்லைப் பகுதிகள் (உறுப்பு 1 - 4).
 பகுதி II - இந்திய குடியுரிமை (உறுப்பு 5 - 11).
 பகுதி III - அடிப்படை உரிமைகள் (உறுப்பு 12 - 35).
 பகுதி IV - அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (உறுப்பு 36 - 51).
 பகுதி IV – A - அடிப்படைக் கடமைகள் (உறுப்பு 51A).
 பகுதி V - குடியரசுத் தலைவர், மத்திய அரசாங்கம், உச்ச நீதிமன்றம் (உறுப்பு 52-151).
 பகுதி VI - ஆளுநர், மாநில அரசாங்கம், உயர் நீதிமன்றம் (உறுப்பு 152-237).
 பகுதி VII - முதல் அட்டவணையில் இடம்பெற்றிருந்த PART B மாநிலங்கள்  தொடர்பானது (உறுப்பு 238) 1956-ல் கொண்டுவரப்பட்ட ஏழாவது சட்ட திருத்தத்தின்படி நீக்கப்பட்டது.
 பகுதி VIII - யூனியன் பிரதேசங்கள் (உறுப்பு 239 - 242).
 பகுதி IX - பஞ்சாயத்து ராஜ் (உறுப்பு 243 - 243O).
 பகுதி IX A - நகராட்சிகள் (உறுப்பு 243P - 243ZG)
 பகுதி X  பழங்குடியினர் பகுதிகள் (உறுப்பு 244 – 244A).
 பகுதி XI   மத்திய மாநில உறவுகள் (உறுப்பு 245-263).
 பகுதி XII   நிதி, சொத்து, ஒப்பந்தங்கள், உரிமை வழக்குகள் ஆகியவை (உறுப்பு 264  300A).
 பகுதி XIII  இந்திய ஆட்சிப் பரப்புக்குள்ளாக வணிகம், பெருவணிகம், மற்றும் வணிகப் போக்குவரத்து தொடர்பு (உறுப்பு 301-307).
 பகுதி XIV   மத்திய, மாநில அரசுப்பணிகள் தேர்வாணையங்கள் (உறுப்பு 308-323).
 பகுதி XV  தேர்தல் (உறுப்பு 324-329).
 பகுதி XVI  ஆங்கிலோ இந்தியர் , பிற்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் , பழங்குடியினருக்கான சிறப்பு சலுகைகள் (உறுப்பு 330  342).
 பகுதி XVII  ஆட்சிமொழிகள் (உறுப்பு 343  351).
 பகுதி XVIII   அவசரநிலைப் பிரகடனம் (உறுப்பு 352  360).
 பகுதி XIX – பல்வகை (உறுப்பு 361  367).
 பகுதி XX அரசியல் சட்டத் திருத்த முறைகள் (உறுப்பு 368).
 பகுதி XXI  தற்காலிக, இடைக்கால சிறப்பு அதிகாரங்கள் (உறுப்பு 369-392).
 பகுதி XXII  அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கம், நீக்கம், அதிகாரபூர்வ பனுவல் (உறுப்பு 393  395).
 அரசமைப்பு முகவுரை  இந்திய அரசியல் அமைப்பின் நோக்கம், நம்பிக்கை
 அடிப்படை உரிமைகள்  அரசாங்கத்தின் எதேச்சாதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது
 அரசு நெறிமுறைக் கோட்பாடு  நல அரசை (Welfare State) உருவாக்குவது.
 அடிப்படை கடமைகள்  குடிமக்களின் பொறுப்புணர்ச்சியை மேம்படுத்துவது.
 அட்டவணைகள்
 அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது எட்டு அட்டவணைகளைக் கொண்டி ருந்தது.
 முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் (1951) வழியாக ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
 பத்தாவது அட்டவணை 52-வது திருத்தத்தின் (1985) மூலம் சேர்க்கப்பட்டது.
 1992-ல் கொண்டுவரப்பட்ட 73 மற்றும் 74-வது திருத்தங்களின்படி 11, 12வது அட்டவணைகள் சேர்க்கப்பட்டன.
 எட்டாவது அட்டவணையில் தொடக்கத்தில் 14 மொழிகள் இடம் பெற்றிருந்தன.
 எட்டாவது அட்டவணையில் 21-வது திருத்தத்தின் (1967) மூலம் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.
 எட்டாவது அட்டவணையில் 71-வது திருத்தத்தின் (1992) மூலம் கொங்கணி, மணிப்புரி,நேபாளி மொழிகள் சேர்க்கப்பட்டன.
 எட்டாவது அட்டவணையில் 92-வது திருத்தத்தின் (2003) மூலம் போடோ (அஸ்ஸாம்). டோஹ்ரி (காஷ்மீர்) , மைதிலி (பீகார்) , சந்தாலி (பீகார்) ஆகிய மொழிகள்  சேர்க்கப்பட்டன.
 ஏழாவது அட்டவணையில் மத்திய பட்டியலில் 100 பொருள்களும், மாநில பட்டியலில் 61 பொருள்களும், பொதுப் பட்டியலில் 52 பொருள்களும் இடம்பெற்றுள்ளன.
 ஒன்பதாவது அட்டவணையில் தற்போது 284 சட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
 அரசமைப்பு அட்டவணைகள் (Schedules )
 முதல் அட்டவணை : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல்.
 இரண்டாவது அட்டவணை : குடியரசுத் தலைவர், ஆளுநர், உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள்.
 மூன்றாவது அட்டவணை : பதவி யேற்பு உறுதி மொழிகளின் பட்டியல்.
 நான்காவது அட்டவணை : மாநிலங்களுக்கான ராஜ்யசபா இடங்களின் எண்ணிக்கை.
 ஐந்தாவது அட்டவணை : பட்டியல் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் நிர்வாகம்.
 ஆறாவது அட்டவணை : அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், அருணாசல பிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் நிர்வாகம்.
 ஏழாவது அட்டவணை : மத்திய மாநில அதிகார பகிர்வு பட்டியல்.
 எட்டாவது அட்டவணை : அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் (22 மொழிகள்).
 ஒன்பதாவது அட்டவணை : உச்ச நீதிமன்ற மேலாய்விலிருந்து பாதுகாப்பு பெற்ற சட்டங்கள்.
பத்தாவது அட்டவணை : கட்சித்தாவல் தடைச் சட்டம்
பதினோறாவது அட்டவணை : பஞ்சாயத்து ராஜ் தொடர்பான அம்சங்கள் (29 பொருள்கள்).
பன்னிரண்டாவது அட்டவணை: நகராட்சி தொடர்பான அம்சங்கள் (18 பொருள்கள்).
முக்கிய உறுப்புகள் (Articles)
 உறுப்பு 1 - 4: இந்தியாவின் பரப்பு, புதிய மாநிலம் உருவாக்கம் மற்றும் பெயர் மாற்றம்.
 உறுப்பு 5 - 11: குடியுரிமை (Citizenship)
 உறுப்பு 12 - 35: அடிப்படை உரிமைகள். (Fundamental Rights)
 உறுப்பு 14: சமத்துவ உரிமை.
 உறுப்பு 16: இடஒதுக்கீடு (அரசுப் பணியில் அனைவருக்கும் சம வாய்ப்பு).
உறுப்பு 17: தீண்டாமை ஒழிப்பு.
 உறுப்பு 18: பட்டங்கள் ஒழிப்பு.
 உறுப்பு 19: எழுத்துரிமை, பேச்சுரிமை.
 உறுப்பு 24: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு.
 உறுப்பு 21A : கல்வி அடிப்படை உரிமை (6-14 வயது உட்பட்டவருக்கு).
 உறுப்பு 25: சமய உரிமை.
 உறுப்பு 36  51: அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்.
 உறுப்பு 32: அரசியல் சட்டத் தீர்வு உரிமை   (Constitutional Remedies)
 உறுப்பு 40: கிராம பஞ்சாயத்து அமைப்பு.
 உறுப்பு 44: பொது சிவில் சட்டம்.
 உறுப்பு 45: இளம் சிறார் பாதுகாப்பு (6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு).
 உறுப்பு 48: பசுவதைத் தடுப்பு
 உறுப்பு 61: குடியரசுத் தலைவர் நீக்கம்
 உறுப்பு 51A: அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)
 உறுப்பு 52 - 151: மத்திய அரசாங்கம்
 உறுப்பு 79: பாராளுமன்ற வரையறை
 உறுப்பு 110: பண மசோதா (Money Bill )
 உறுப்பு 108: பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் (Joint Sitting)
 உறுப்பு 112: ஆண்டு நிதிநிலை அறிக்கை (Annual Budget)
 உறுப்பு 143: உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை ஆள்வரை
 உறுப்பு 152 - 237: மாநில அரசாங்கம்
 உறுப்பு 156: ஆளுநரின் பதவிக் காலம்
 உறுப்பு 226: உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணை ஆள்வரை
 உறுப்பு 280: நிதி ஆணையம்
 உறுப்பு 300A: சொத்துரிமை
 உறுப்பு 343: ஹிந்தி இந்தியாவின் ஆட்சிமொழி
 உறுப்பு 352: தேசிய அவசரநிலை பிரகடனம் (Emergency Provisions)
 உறுப்பு 356: மாநில அவசரநிலை பிரகடனம் (மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி)
 உறுப்பு 360: நிதிநிலை அவசரநிலை பிரகடனம் (Financial Emergency)
 உறுப்பு 368: அரசியல் சட்ட திருத்தம் ( Amendments to the constitution)
 உறுப்பு 370: ஜம்மு காஷ்மீருக்குத் தனி அதிகாரம்
அரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை
 அரசமைப்பின் உறுப்பு 368-ன் படி காலமாறுதல்களுக்கேற்ப அரசமைப்பில் உள்ள சட்டங்கள் முறைப்படி திருத்தம் செய்யப்படுகின்றது. திருத்த முறைக்கு உட்படாத சில திருத்தங்களும் மேற்கொள்ளப்படலாம்.
 திருத்தம் செய்யப்படுகிற அரசியல் சட்டத்துக்கேற்ப அரசியல் சட்டத்தை திருத்த மூன்று வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது.
1. பாராளுமன்றத்தின் பெரும்பான்மையுடன் திருத்தப்படுதல்
2. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திருத்தப்படுதல்
3. பாராளுமன்றத்தின் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன், மாநில சட்டப் பேரவைகளிலும் பெரும்பான்மை பெற்று திருத்தப்படுதல்
முக்கிய அரசியல் சட்டத் திருத்தங்கள்
 முதல் திருத்தம் (1951)-  ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
 வெளிநாடுகளுடன் பேச்சுரிமை, கருத்து பரிமாற்றம் ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகளை விதித்தது, சமூக, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க சட்டமியற்றும் வகையில் மாநிலங்களுக்கு அதிகாரம் அளித்தல்.
 ஏழாவது திருத்தம் (1956) - மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம். (14 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கத்தை அங்கீகரித்தது)
 இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கான பொதுவான உயர் நீதிமன்றம் அமைக்க வழிவகை செய்தது.
 14-வது திருத்தம் (1962) – பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
 16-வது திருத்தம் (1963) – பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர் இந்திய ஒருமைப்பாட்டை காப்பதற்கும், பிரிவினைக்கான பிரசாரம் எதையும் செய்யாமல் இருப்பதற்கும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த திருத்தத்தின் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட நாடு கோரிக்கையை கைவிட நேரிட்டது.
 21-வது திருத்தம் (1967) - எட்டாவது அட்டவணையில் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.
 24-வது திருத்தம் (1971) – பாராளுமன்றத்திற்கு இந்திய அரசமைப்பின் எந்த பகுதியையும் திருத்தும் அதிகாரத்தை வழங்கியது.
 26-வது திருத்தம் (1971) – முன்னாள் மன்னர்களுக்கான மானியங்களும், சிறப்புரிமைகளும் ஒழிக்கப்பட்டன.
 42-வது திருத்தம் (1976) - சிறிய அரசமைப்புச் சட்டம் என்றழைக்கப்படுகிறது.  அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டன.
 44-வது திருத்தம் (1978) - சொத்துரிமை, அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டது.
 52-வது திருத்தம் (1985) - பத்தாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
 58-வது திருத்தம் (1987)  - ஹிந்தியில் அமைந்த அரசமைப்புச் சட்டமும் அதிகாரபூர்வமான பனுவலாக ஏற்கப்பட்டது.
 61-வது திருத்தம் (1989) - வாக்களிப்பதற்கான வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தது.
 69-வது திருத்தம் (1991) - டெல்லி இந்தியாவின் தலைநகர் பகுதி (National Capital Territory) ஆனது.
 71-வது திருத்தம் (1992)  - கொங்கனி, மணிப்பூரி, நேபாளி ஆகிய மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
 73-வது திருத்தம் (1992) - பஞ்சாயத்து ராஜ்.
 74-வது திருத்தம் (1994) - நகராட்சி நிர்வாகம் தொடர்பானது.
 76-வது திருத்தம் (1996) - தமிழக இடஒதுக்கீடு ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
 82-வது திருத்தம் (2000) - பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு.
 84-வது திருத்தம் (2001) - லோக்சபா சீட் எண்ணிக்கையை 2026 வரை நிரந்தரப்படுத்தியது.
 860வது திருத்தம் (2002) - கல்வி அடிப்படை உரிமையானது. 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி அளிப்பது என்ற பொருள் உறுப்பு 45-ல் இருந்து, உறுப்பு 21A க்கு மாற்றப்பட்டது. மேலும் 6 வயதுக்குட்பட்ட இளஞ்சிறார் பாதுகாப்பு என்ற புதிய பொருளைக் கொண்டதாக உறுப்பு 45 மாற்றி அமைக்கப்பட்டது.
 பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தருவதை வலியுறுத்தும் 51 A என்ற உறுப்பு சேர்க்கப்பட்டது.
 87-வது திருத்தம் (2003)  மக்களவை, மாநில சட்டமன்ற சீட்டுகளை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாற்றியமைத்தது.
 91-வது திருத்தம் (2003)  மத்திய, மாநில அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை, லோக்சபா, மாநில சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கையில் 15%க்கு மேம்படக் கூடாது என உச்சவரம்பு கொண்டு வரப்பட்டது.
 92-வது திருத்தம் (2003)  போடோ, மைதிலி, சந்தாலி, டோக்ரி மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
 93-வது திருத்தம் (2005)  பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு.
 94-வது திருத்தம் (2006)  மலைவாழ் மக்களின் நலனுக்கு தனி அமைச்சர் நியமனத்தை (ஜார்க்கண்ட், சத்தீஸ்கர்) வலியுறுத்தி கொண்டுவரப்பட்டது.
 96-வது திருத்தம் (2011)  இந்திய அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் 15-வதாக இடம்பெறும் 'ஒரியா’ மொழியின் பெயர் 'ஒடியா’ எனப் பெயர்மாற்றம் செய்ய வழிவகுத்தது.
 97-வது திருத்தம் (2012) – உறுப்பு 19 (1) Cல் கூட்டுறவு சங்கங்கள் (Co Operative Societies) என்னும் சொல்லை சேர்ப்பது தொடர்பானது. மேலும் உறுப்பு 43 Bயை சேர்த்ததுடன், பகுதி IX  B-யை (கூட்டுறவு சங்கங்கள்) சேர்க்க வழிவகை செய்ததது. இந்திய கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளையும், பொருளாதாரத்தையும் ஊக்குவிப்பது இந்த திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
 98-வது திருத்தம் (2013) – ஹைதராபாத் – கர்நாடகா பகுதியில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள கர்நாடக ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உறுப்பு 371Eயை புதிதாக சேர்த்தது.
 8, 23, 45, 65, 79, 95-வது திருத்தங்கள் – பாராளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு மற்றும் மக்களவை மாநில சட்டமன்றங்களில் ஆங்கிலோ – இந்தியர்களுக்கான நியமனம் ஆகியவற்றை பத்து பத்து ஆண்டுகளாக நீட்டித்தது.
அடிப்படை உரிமைகள்
 அடிப்படை உரிமைகள் என்பவை ஒரு நாட்டு குடிமக்கள் சுதந்தரத்துடனும், விருப்பத்துடனும் வாழ வழங்கப்படும் ஆதார உரிமைகள். அடிப்படை உரிமைகள் அரசின் தன்னிச்சையான அதிகாரத்தில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பவை.
 அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது மக்கள் தீர்வு வேண்டி நீதிமன்றத்தை நாடலாம்.
 உறுப்புகள் 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள்
1. சமத்துவ உரிமை
(உறுப்புகள் 14 முதல் 18 வரை)
2. சுதந்திர உரிமை
(உறுப்புகள் 19 முதல் 22 வரை)
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை
(உறுப்புகள் 23 மற்றும் 24)
4. சமய சுதந்திர உரிமை
(உறுப்புகள் 25 முதல் 28 வரை)
5. கல்வி மற்றும் கலாச்சார உரிமைகள்
(உறுப்புகள் 29 முதல் 30 வரை)
6. அரசமைப்பு சார் தீர்வுகள் உரிமை
(உறுப்பு 32)
முன்பு அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருந்த சொத்துரிமை (உறுப்பு 31) 1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 44வது சட்ட திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சாதாரண அரசமைப்பு உரிமையாக உறுப்பு 300ஏ-யில் வைக்கப்பட்டது.
நீதிப் பேராணைகள் (Writs)
இந்திய அரசமைப்பு சட்டத்தின் 32வது உறுப்பின்படி, இந்தியர்களுக்கு உள்ள நீதி பேராணைகள் பின் வருமாறு:-
 ஆட்கொணர் நீதிப் பேராணை (Writ of Habeas Corpus)
 செயலுறுத்தும் நீதிப் பேராணை (Writ of Mandamus)
 நெறிப்படுத்தும் நீதிப் பேராணை (Writ of Certiorari)
 தகுதி வினவும் நீதிப் பேராணை (Writ of Quo Warranto)
 தடைசெய்யும் நீதிப் பேராணை (Writ of Prohibition)

அடிப்படைக் கடமைகள்
1976-ல் செய்யப்பட்ட 42-வது அரசியலமைப்புத் திருத்தம் பத்து அடிப்படைக் கடமைகளை அரசமைப்பில் இணைத்தது. அடிப்படைக்கடமைகள் 51 எனும் உறுப்பாக அரசியலமைப்பின் IVA பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
1) இந்திய அரசமைப்பிற்குக் கீழ்ப்படிவதுடன் அரசமைப்பு நிறுவனங்கள், லட்சியம், தேசியக்கொடி, மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை மதிக்க வேண்டும்.
2) விடுதலைப் போராட்டத்தின் போது புத்துணர்வளித்த உன்னதமான இலட்சியங்களை நினைவிற்கொண்டு பின்பற்ற வேண்டும்.
3) இந்தியாவின் இறைமை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
4) அழைக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுத் தேசியச் சேவை செய்ய வேண்டும்.
5) சமய, மொழி, பிராந்திய வேறுபாடுகளைகக் கடந்து இந்திய மக்கள் அனைவரிடமும் சகோரத்துவமும் இணைக்கமும் ஏற்படப் பாடுபடுவதுடன் பெண்களை இழிவு செய்யும் செயல்களை விட்டொழிக்க வேண்டும்.
6) நமது கூட்டுக்கலாச்சாரத்தின் பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
7) காடுகள், ஏரிகள், ஆறுகள், விலங்கினங்கள் ஆகியவை உள்ளிட்ட புறச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவதுடன் உயிரினங்கள் மீது கருணை காட்ட வேண்டும்.
8) அறிவியல் உணர்வு, மனிதநேயம், புலனறிவு மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும்.
9) வன்முறையை வெறுத்து ஒதுக்கிப் பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்.
10) தனிப்பட்ட அளவிலும் கூட்டுச் செயற்பாட்டிலும் மிகச் சிறந்த நிலையை அடைய முயலுவதன் மூலமாக நாட்டின் மேம்பாட்டிற்கு முயற்சிக்க வேண்டும்.
11) 6  முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்விக்கான வாய்ப்பை வழங்குவது
2002-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 86-வது அரசமைப்பு சட்ட திருத்தத்தின் படி 11-வது அடிப்படைக் கடமை சேர்க்கப்பட்டது.
இந்தியக் குடியுரிமை
இந்திய குடியுரிமையை ஐந்து முறைகளின் பெறலாம்.
 பிறப்பு (By Birth)
 மரபு வழி (By Descent)
 பதிவு (By Registration)
 இயல்பூட்டுதல் (By Naturalisation)
 பிரதேசங்களின் ஒன்றிணைப்பு (By incorporation of Territories)
குடியுரிமையை இழக்கும் மூன்று முறைகள்
 துறத்தல் (Renunciation)
 முடிவுக்கு வருதல் (Termination)
 நீக்குதல் (Deprivation)
அரசு நெறிமுறை கோட்பாடுகள்
அரசு சட்டமியற்றுதல் மற்றும் நிர்வாகத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் கொள்கைகள் இதில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
இந்திய அரசு சட்டங்களை இயற்றும்போது இந்திய அரசமைப்பு சட்டத்தின் நான்காவது பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோட்பாடுகளை கருத்திற்கொண்டு சட்டமியற்ற வேண்டும்.
இவை நீதிமன்றங்களின் வாயிலாகக் கட்டாயப்படுத்தப்பட முடியாதவை. அதாவது இவற்றில் எந்தக் கொள்கையையும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்காக எவரும் அரசின் மீது வழக்குத் தொடர முடியாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அரசமைப்பு சட்டத்தின் வழிகாட்டு நெறிகளின்படி செம்மையாக செயலாற்றவில்லை எனில் அடுத்தது வரும் தேர்தலில் மக்கள் அந்த அரசாங்கத்திற்கு தக்க தீர்ப்பு அளிப்பார்கள் என்று டாக்டர்.அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரம் தொடர்பான நெறிகள்
சமுதாய,  பொருளாதார, அரசியல் நீதி அனைவருக்கும் கிடைத்து மக்கள் நலம் எற்படும் வண்ணம் அரசு செயல்பட வேண்டும் (உறுப்பு 38)
எல்லா மக்களுக்கும் அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையான அம்சங்கள் கிடைக்கவும், பொருளாதார வனங்களின் உரிமை பரவலாக்கப்படவும், செல்வம் ஒரு சிலரிடமே குவிதல் தவிர்க்கப்படவும், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உழைப்பிற்குச் சம ஊதியம் கிடைக்கவும், தொழிலாளர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரது உடல்நலனைப் பாதிக்கும் வண்ணம் அவர்களிடம் வேலை வாங்குவது தவிர்க்கப்படவும் அவசியமான கொள்கையை அரசு வகுக்க வேண்டும் (உறுப்பு 39)
வேலை பார்க்கும் உரிமை, கல்வியுரிமை, வேலை வாய்ப்பற்றோர்க்கும், வயது முதிர்ந்தோர்க்கும் இயலாதவர்கட்கும் உதவுதல் போன்றவற்றை அரசு செய்ய வெண்டும் (உறுப்பு 41)
காந்தியக் கொள்கைகள் தொடர்பான நெறிகள்
ஊராட்சி மன்றங்கள் வலுவாக்கப்பட்டு அவை சிறப்பான சுய ஆட்சி அமைப்புகளாக ஆக அரசு முயல வேண்டும் (உறுப்பு 40)
மக்களின் உணவு சத்துள்ளதாக அமைந்து அவர்கள் உடல்நலம் பெற முயற்சிக்க வேண்டும். போதை தரும் பானங்கள் மற்றும் மருந்துப் பொருட்களைப் பயன்படுத்துதல் தடை செய்யப்பட வேண்டும் (உறுப்பு 47)
கால்நடை பராமரிப்பு நவீன அறிவியல் முறைப்படி அமைய கவனம் செலுத்தப்பட வேண்டும். பசு மற்றும் கன்றுகளைக் கொல்லுவது தடை செய்யப்பட வேண்டும் (உறுப்பு 48)
தொழிலாளர்கள் தொடர்பான நெறிகள்
தொழிலாளர்கள் பணிபுரியுமிடத்தில் நியாயமான மனிதாபிமானச் சூழல் நிலவவும், பெண்களுக்கு மகப்பேறு நிவாரணம் கிடைக்கவும் வகை செய்ய வேண்டும் (உறுப்பு 42)
விவசாயத் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து விதமான தொழிலாளர்கட்கும் ஒரளவு நல்ல வாழ்க்கைத்தரம் அமையும் விதத்தில் ஊதியம் பெறவும் பணி இடத்தில் நல்ல சூழல் அமையவும் ஒய்வு வசதிகள் கிடைக்கவும் முயற்சிப்பதுடன் கிராமப்புறங்களில் குடிசைத்தொழில்கள் மேம்படவும் முயற்சிக்க வேண்டும் (உறுப்பு 43)
இந்தியாவிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரே விதமான சீரியல் சட்டத்தொகுப்பு அமைய முயற்சிக்க வேண்டும் (உறுப்பு 44)
சமுதாயத்தில் நலிந்த பிரிவினர், குறிப்பாக அட்டவணைச் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சமுதாய அநீதி மற்றும் சுரண்டலிருந்து காக்கப்படவும் மேம்பாடயைவும் ஆவண செய்ய வேண்டும் (உறுப்பு 46)
வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களையும் இடங்களையும் பாதுகாக்க வேண்டும் (உறுப்பு 49)
நீதித்துறையை நிர்வாகத்துறையிடமிருந்து பிரிக்க முயல வேண்டும் (உறுப்பு 50)
பன்னாட்டு அமைதி காக்கவும் நாடுகளிடையே இணக்கத்தை வளர்க்கவும் பன்னாட்டுச் பிரச்னைகளை அமைதி வழிகளில் தீர்க்கவும் அரசு முயல வேண்டும் (உறுப்பு 51)
சில வழிகாட்டி நெறிகளை 42வது அரசியலமைப்புத் திருத்தம் இணைத்தது. அவையாவனை:
குழந்தைகள், இளைஞர்கள் நன்கு வளர வாய்ப்புகள் வழங்க்கப்பட வேண்டும். இளைஞர்கள் சுரண்டலிலிருந்து காக்கப்படவேண்டு (உறுப்பு 39)
சட்டமுறை நீதியைக் காக்கும் வண்ணம் அமைய வேண்டும். பொருளாதார வசதியற்ற மக்களுக்கும் நீதி கிடைக்க இலவசச் சட்ட உதவிக்கான முறையை உருவாக்க வேண்டும் (உறுப்பு 39)
தொழிற்சாலைகளை மேலாண்மை செய்வதில் தொழிலாளர்களும் பங்குபெற வகை செய்தல் வேண்டும் (உறுப்பு 43)
புறச்சூழலை மேம்படுத்தவும் காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கவும் அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் (உறுப்பு 48)
அரசியலமைப்பின் 44-வது திருத்தம் கீழ்க்கண்ட நெறியை இணைத்தது. தனி நபர்களிடையில் மட்டுமின்றி மக்கள் பிரிவினர்களிடையிலும் காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைய அரசு முயல வேண்டும் (உறுப்பு 38)
வழிகாட்டி நெறிகள் நடைமுறைப் படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து அரசியல் நிர்ணயச் சபையில் வலியுறுத்தப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றவா என்பதை (தேர்தலை கருத்தில்கொண்டு) மக்கள் கண்காணிப்பார்கள் என்றார்.
மத்திய அரசாங்கம்
 மத்திய சட்டமியற்றும் அமைப்பு:  லோக்சபா, ராஜ்யசபா.
 மத்திய நிர்வாக அமைப்பு:  குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சரவை.
 மத்திய நீதி அமைப்பு:  உச்ச நீதிமன்றம்.
மாநில அரசாங்கம்
 மாநில சட்டமியற்றும் அமைப்பு:   சட்டசபை, சட்டமேலவை
 மாநில நிர்வாக அமைப்பு:  ஆளுநர், முதலமைச்சர், மாநில அமைச்சரவை.
 மாநில நீதி அமைப்பு:  உயர் நீதிமன்றம்.
பதவிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்புத் தகுதி
 குடியரசுத் தலைவர் : 35
 ஆளுநர் : 35
 லோக்சபா உறுப்பினர் : 25
 ராஜ்யசபா உறுப்பினர் : 30
 சட்டமன்ற உறுப்பினர் : 25
சட்டமேலவை உறுப்பினர் : 30
 பஞ்சாயத்து உறுப்பினர் : 21
பதவிகளும் ஓய்வு பெறும் வயதும்
 உயர் நீதிமன்ற நீதிபதி : 62
 உச்ச நீதிமன்ற நீதிபதி : 65
 தணிக்கையாளர் மற்றும் தலைமை கணக்காயர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது  இதில் முதலில் வருவது
 தலைமை தேர்தல் ஆணையர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது  இதில் முதலில் வருவது
 மத்திய பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது
 மாநில பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 62 வயது இதில் முதலில் வருவது
குடியரசுத் தலைவர்
இந்திய குடியரசுத் தலைவர் இந்திய அரசியல் தலைவராகவும், இந்திய பாதுகாப்பு படையின் உச்சநிலை கமாண்டராகவும் திகழ்கிறார்.
 குடியரசுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவரை பிரதமராக நியமிக்கிறார்.
 குடியரசுத் தலைவர் பிரதமரின் ஆலோசனைப்படி மத்திய அமைச்சர்களை நியமிக்கிறார்.
 மத்திய அரசு நிர்வாகம் குடியரசுத் தலைவர் பெயரிலேயே நடைபெறுகிறது.
 இந்திய தலைமை நீதிபதி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
 இந்திய குடியரசுத் தலைவர் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
 பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களைச் சார்ந்த நியமன உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது.
 குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒற்றை மாற்று வாக்கு முறையில் அமைந்த விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படுகிறது.
பிரதமர்
பாராளுமன்ற முறை அரசாங்கத்தின் உண்மையான நிர்வாகத்துறைத் தலைவர்
லோக்சபாவில் பெரும்பான்மை பெற்ற அரசியல் கட்சிகளின் கூட்டணியால் தேர்ந்தேடுக்கப்படுபவரை குடியரசுத்தலைவர் பிரதமராக நியமிக்கிறார்.
பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒரு அவையில் உறுப்பினராக இருக்க வேண்டும்.அவ்வாறு இல்லாதபோது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும்.
அமைச்சரவையின் தலைவர் பிரதமர் ஆவார். இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை குடியரசுத்தலைவரின் பெயரில் இவரே கவனிக்கிறார்.
நாட்டின் முக்கிய நிர்வாக முடிவுகளை அவ்வப்போது குடியரசுத்தலைவருக்கு தெரிவிப்பது, அமைச்சர்களுக்க்கு துறைகளை ஒதுக்கீடு செய்வது, கேபினெட் கூட்டத்திற்கு தலைமை தாங்குவது, திட்டக்குழுவிற்கு தலைமை வகிப்பது ஆகியவை பிரதமரின் முக்கிய பணிகள்
மத்திய அமைச்சரவை
இந்திய அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் மத்திய அமைச்சரவை, ஓர் கூட்டுப் பொறுப்புடைய அமைப்பு .
அமைச்சரவையின் தலைவர் பிரதமர், கேபினெட் அல்லது அமைச்சர் குழு என அழைக்கப்படும் அமைச்சரவைக்குள் அடங்கிய அமைப்பிற்கும் அவரே தலைவர்.
இந்திய அரசமைப்பின்படி  அமைச்சர் பொறுப்பேற்கும் உறுப்பினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதாவதொன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்.
பாராளுமன்றம்
இந்திய நாடாளுமன்றம் அல்லது இந்தியப் பாராளுமன்றம், மாநிலங்களவை (ராஜ்யசபா ) மற்றும் மக்களவை (லோக்சபா) ஆகிய இரு அவைகளைக் கொண்டது.
மக்களவை (லோக் சபா)
மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.
மக்களவையின்  பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரையே குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். மக்களைவையின் நம்பிக்கையை பெற்றிருக்கும் வரையில் மட்டுமே பிரதமரும் அவரது அமைச்சரவையும் பதவியில் நீடித்திருக்க முடியும் .
மாநிலங்களவை (ராஜ்ய சபா)
மாநிலங்களவை நிரந்தரமானது. இதன் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை  250
மறைமுக தேர்தல் மூலம்  238  உறுப்பினர்கள் மாநில சட்டமன்றம், யூனியன் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேர் நியமன உறுப்பினர்களாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள்.
ராஜ்ய சபா உறுப்பினர்களின்  பதவிக்காலம் ஆறு வருடங்கள், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பதவி இழப்பர்.
மாநிலங்களவையின் முதல் கூட்டம் 1952-ம் ஆண்டு மே 13 அன்று நடந்தது.
மாநில அரசாங்கம்
மாநில ஆளுநர்
பெயரளவிலான நிர்வாகத்துறைத் தலைவராகத் திகழ்பவர் மாநில ஆளுநர் (Governor).
குடியரசுத்தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.குடியரசுத் தலைவர் ஆளுநரை நியமிக்கும் போது அந்த மாநிலத்தின் முதலமைச்சரைக் கலந்தாலோசிக்கலாம்.
பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். ஆனால் குடியரசுத்தலைவர் அவரை எப்போது வேண்டுமானாலும் பதவி நீக்கம் செய்யலாம்.
1956-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 7-வது அரசமைப்பு சட்ட திருத்தத்தின்படி குடியரசுத்தலைவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒரே ஆளுநரை நியமிக்கலாம்.
ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு இந்தியக்குடிமகனாகவும் 35 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அரசாங்கப் பணியில் இருப்பவராகவோ, பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் ஆகியவற்றின் உறுப்பினராகவோ, இருக்கக்கூடாது.
முதலமைச்சரை ஆளுநர் நியமிக்கிறார். முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் பிற அமைச்சர்களையும்  நியமிக்கிறார். மாநிலத் தலைமை அரசு வழக்கறிஞரும் மற்றும் பல முக்கிய அதிகாரிகளும் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றார்கள். மாநில அரசாங்கத்தின் எல்லா நிர்வாகச் செயல்களும் ஆளுநரின் பெயரில் செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் அவர் சட்டமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் துவக்கவுரை நிகழ்த்துகிறார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் எல்லா மசோதாக்களும் அவரது ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமாக்க முடியும்.
மாநிலச்சட்டமன்றத்தைக் கூட்டவும், கூட்டத்தொடரை ஒத்திவைக்கவும் ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார்.
குற்றமன்னிப்பு, தண்டனையைக் குறைத்தல் போன்ற அதிகாரங்கள் ஆளுநருக்கு உண்டு.
மாநில முதலமைச்சர்
மாநில அரசாங்கத்தின் உண்மையான நிர்வாகத்துறைத் தலைவராகவும், மாநில அமைச்சரவையின் தலைவராகவும்  திகழ்பவர் மாநில முதலமைச்சர் (Chief Minister).
முதலமைச்சரை ஆளுநர் நியமனம் செய்கிறார். முதலமைச்சரின் ஆலோசனைப்படி பிற அமைச்சர்களை ஆளுநர் நியமிக்கிறார்.
முதலமைச்சராக நியமிக்கப்படுபவர், மாநிலச்சட்டமன்றத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். நியமிக்கப்படும்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லையெனில், நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.
அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் அவர்களுக்கான துறைகளையும் முதலமைச்சரே முடிவு செய்கிறார்.
மாநில சட்டமன்றம்
மாநில சட்டமன்றம் ஈரவை அல்லது ஓரவைக் கொண்டது. ஈரவை சட்டமன்றத்தில் சட்ட மன்றமும் (கீழவை), சட்ட மேலவையும் இருக்கும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்ற கீழவையும், மறைமுக தேர்ந்தெடுப்பு மற்றும் நியமன உறுப்பினர்களை மேலவையும் கொண்டிருக்கும்.
மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை பெற்றிருப்பவரே முதலமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
இந்தியாவில் 6 மாநிலங்களில் சட்டமேலவை உள்ளன. பீகார், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா.
உச்ச நீதிமன்றம்
இந்தியாவிலேயே உச்ச பட்ச நீதி அதிகாரம் கொண்ட அமைப்பு உச்ச நீதிமன்றமாகும்.
உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்னைகள் குறித்த வழக்குகளை விசாரிக்கின்றது..
உச்ச நீதிமன்றத்தின் ஆள்வரை,  தனி ஆள்வரை (அ) முதலேற்பு ஆள் வரை, மேல் முறையீட்டு ஆள்வரை, நீதிப் பேராணை ஆள்வரை ஆலோசனை ஆள்வரை என நான்கு வகைப்படும்.
மத்திய, மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை குறித்த வழக்குகள், இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை குறித்த வழக்குகளை நீதிமன்றம் தனி ஆள்வரை கீழ் விசாரிக்கிறது.
இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது, உறுப்பு 32-ன் கீழ் நீதிப் பேராணை கோரி அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.
இந்திய குடியரசுத் தலைவர் கேட்கும்பட்சத்தில் உறுப்பு 143-ன் கீழ் உச்ச நீதிமன்றம் சட்ட சிக்கல்கள் குறித்து ஆலோசனை வழங்குகிறது.
உச்ச நீதிமன்றம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உணர்வை பாதுகாப்பதால் இது அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் எனப்படுகிறது.
உயர் நீதிமன்றங்கள்
உயர் நீதிமன்றம், மாநில நீதித்துறையின் தலைமையாகும்.ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர் நீதிமன்றம் இருக்கும்.
ஒரு மாநிலத்தின் நீதித் துறை உயர் நீதிமன்றத்தினையும் கீழ் நீதிமன்றங்களையும் உள்ளடக்கியதாகும்.
பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்குமோ, யூனியன் பிரதேசங்களுக்குமோ, சேர்த்து பொதுவான ஒரு உயர் நீதிமன்றத்தினை அமைக்கலாம் (விதி 231).

இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கடி நிலைகள் - மூன்று

1. தேசிய நெருக்கடி நிலை

2. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி

3. நிதி நெருக்கடி நிலை

* தேசிய நெருக்கடியை (National Emergency) விவரிக்கும் ஷரத்து -  352

* தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பவர் - ஜனாதிபதி

* தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான காரணங்கள்

1. போர்

2. போர் மூலம் அபாயம்

3. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு

4. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பிற்கான அபாயம்

5. உள்நாட்டுக் கலவரம்

* தேசிய நெருக்கடியின் கால அளவு 6 மாதங்கள் மட்டும்.

* 6 மாதத்திற்குப் பிறகு, மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க அதிகாரம் பெற்றவர் ஜனாதிபதி

* ஜனாதிபதி ஆட்சியை குறிக்கும் ஷரத்து -  356

*முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமலான வருடம் 1951

* முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்

* இந்தியாவில் இதுவரை ஜனாதிபதி ஆட்சி 102 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

* இந்தியாவில் அதிக முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்

* இந்தியாவில் அதிகமுறை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியவர் இந்திராகாந்தி

* நிதி நெருக்கடி நிலையைப் பற்றிக் கூறும் ஷரத்து-  360

* நிதி நெருக்கடி நிலை பயன்படுத்தப்படும்போது பாராளுமன்றத்தின் அனுமதி பெறவேண்டிய கால அளவு 6 மாதங்கள்

* நிதி நெருக்கடி நிலைக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை பாராளுமன்ற அனுமதி தேவையில்லை.

* நிதி நெருக்கடி நிலை இந்தியாவில் ஒருமுறை கூட பயன்படுத்தப்படவில்லை.

* 1. மாநில அரசுப் பணியாளர்களின் (உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.

* 2. மத்திய அரசின் பணியாளர்களின் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.

* நெருக்கடி நிலையின்போது பாதிக்கப்படாத அடிப்படை உரிமை ஆழ்ற் 21

நிதி ஆணையகம்

* நிதி ஆணையகத்தை நிர்மாணிப்பவர் - ஜனாதிபதி

* நிதிஆணையத்தின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்

* நிதி ஆணையகத்தின் மொத்த உறுப்பினர்கள் - 5 பேர்

* நிதி ஆணையகத்தின் தலைவர் - ஐவரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவர்

* நிதி ஆணையகம் என்பது - இந்திய அரசியல் அமைப்பின்படி அமைக்கப்பட்டது.

* முதல் நிதி ஆணையகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1951

* முதல் நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. நிகோய்

* பத்தாவது நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. பந்த்

* பதினோராவது நிதி ஆணையகத்தின் தலைவர் பேராசிரியர் - ஏ.எம். குஸ்ரோ

* நிதிக்குழுவின் முக்கியப் பணிகள்: மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வரி ஆதாரங்களைப் பிரித்துக் கொடுப்பது மத்திய அரசினால் மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படும் நிதி உதவியை பெறுவதற்கான விதிமுறைகளை வகுப்பது.


தேர்தல் ஆணையம்

* தேர்தல் ஆணையகம் என்பது ஒரு நிரந்தர அமைப்பு.

* தேர்தல் ஆணையகம் அமைக்கக் காரணமான அரசியல் சாசனம் 324

* தேர்தல் ஆணையகம் என்பது மூன்று நபர் கமிஷன் ஆகும்.

* தேர்தல் ஆணையகத்தின் மூன்று ஆணையர் களுக்கும் வழங்கப்பட்ட அதிகாரங்கள் சமம்.

* தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி பாதுகாப்பப்படும் ஷரத்து  324 (5)

* தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

* தேர்தல் ஆணையகத்தின் ஆணையர்களை நியமிப்பவர் ஜனாதிபதி.

* ஜனாதிபதி, உபஜனாதிபதி, லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பெற்றது தேர்தல் ஆணையகம்.

* தேர்தலின்போது வாக்குசீட்டுகளைப் பாதுகாப்பது மற்றும் சீரமைக்கும் பணியைச் செய்வது தேர்தல் ஆணையகம்

* புதிய கட்சிகளைப் பதிவு செய்வது மற்றும் தேர்தல் கட்சிகளை அங்கீகரிப்பது - தேர்தல் ஆணையகம்.

* முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கட்சிகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்க்கும் பொறுப்பைப் பெற்றது - தேர்தல் ஆணையகம்.

* கட்சியில் பிளவு தோன்றினால் தாய் கட்சியை யும் புதுக் கட்சியையும் தீர்மானிப்பது - தேர்தல் ஆணையகம் ஆகும்.

திட்டக்குழு

* திட்டக்குழுவின் தலைவர் - பிரதமர்

* திட்டக்குழுவின் உறுப்பினர்கள் - மாநில முதலமைச்சர்கள்

* திட்டக்குழு என்பது - ஒரு ஆலோசனைக் குழு

* தற்போதைய திட்டக் குழுவின் தலைவர் - பிரதமர் மன்மோகன் சிங்

* தற்போதைய திட்டக் குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா

* ஐந்தாண்டு திட்டங்களின் மீதான ஆலோசனையைத் தரும் அமைப்பு - திட்டக்குழு

தேசிய வளர்ச்சிக்குழு

* தேசிய வளர்ச்சிக் குழுவின் தலைவர் - பிரதமர்

* ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட முடிவான அங்கீகாரம் தரவேண்டிய அமைப்பு - தேசிய வளர்ச்சிக்குழு ஆகும்.

இணைப்புப் பட்டியல்கள

* தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல்களில் எண்ணிக்கை 12 ஆகும்.

* அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது இருந்த பட்டியல்களின் எண்ணிக்கை 8 தான்.

* 1951, 1985, 1992, 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்திருத் தங்கள் மூலம் பின்னர் இணைத்துக் கொள்ளப் பட்டன.

பட்டியல் -1

இந்திய யூனியனின் அடங்கியுள்ள மாநிலங் களையும், மத்திய ஆட்சிப்பகுதிகளையும் பற்றி விவரிப்பது முதல் பட்டியலாகும். தற்சமயம் 28 மாநிலங்களும், 6 மத்திய ஆட்சிப் பகுதிகளும் (யூனியன் பிரதேசங்கள்) ஒரு தேசிய தலைநகர் பகுதியும் இந்தியாவில் உள்ளன.

பட்டியல் -2

இந்தியக் குடியரசுத் தலைவர், துணைக் குடியர சுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநர்கள், தலைமைக் கணக்காய்வர், சட்டமன்றத் தலைவர் ஆகியோரது சம்பளம் மற்றும் பிற வசதிகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இது ஐந்து பிரிவுகளைக் கொண்டது.

பட்டியல் -3

பதவிப்பிரமாணம் மற்றும் உறுதி மொழிகள் பற்றி விளக்குவது மூன்றாவது பட்டியலாகும். மத்திய மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைக் கணக்காய்வர் ஆகியோரது பதவிப்பிரமாணம், இரகசியக் காப்புக் பிரமாணம் மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் இப்பட்டியலில் விளக்கப் பட்டுள்ளன.

பட்டியல் -4

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு தொடர்பானது நான்காவது பட்டியல். மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மாநிலங்களவையில் (ராஜ்யசபா) உறுப்பினர் களைப் பிரித்தளிப்பது பற்றிய விளக்கம் தரப்படுகிறது

பட்டியல் -5

தாழ்த்தப்பட்டோர் (SC) மற்றும் பழங்குடி மக்கள் (ST) வாழும் பகுதிகளின் கட்டுப்பாடும் நிர்வாகமும் பற்றி விளக்குகிறது. பாராளுமன்றத் தில் எளிதான மெஜாரிட்டி மூலம் இப்பட்டியல் களைத் திருத்த இயலும் என்பது குறிப்பிடத் தகுந்தது.

பட்டியல் -6

அசாம், மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் நிர்வாகம் பற்றி ஆறாவது பட்டியல் விவரிக்கிறது.இப்பட்டியலும் எளிமையான மெஜாரிட்டி மூலம் பாராளுமன்றத்தில் திருத்தப்படலாம்.

பட்டியல் -7

மத்திய - மாநில அரசுகளின் அதிகாரம் செயல்பாடுகள் பற்றி ஏழாவது பட்டியல் விளக்குகிறது. இதில் மூன்று பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன.

(அ) மத்தியப் பட்டியல்

இது மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. மத்தியப் பட்டியலில் மொத்தம் 97 துறைகள் உள்ளன. இவற்றில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டது மத்திய அரசு, பாதுகாப்பு, அணுசக்தி, தேசிய நெடுஞ்சாலைகள், விமான, கப்பல் போக்குவரத்துக்கள், காப்பீட்டுக் கழகங்கள், மக்கள்தொகை, நதிகள், தொலைபேசி, பண அச்சடிப்பு இது போன்ற முக்கியமான 97 துறைகள் மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ளன.

(ஆ) மாநிலப்பட்டியல்

இது மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. ஆரம்பத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த துறைகள் 66. இவற்றில் கல்வியும், விளையாட்டும் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டமையால், தற்போது 64 துறைகள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருகின்றன. விவசாய வருமானவரி, நகராட்சி. சிறைச்சாலைகள், சுங்கக் கட்டணங்கள், கேளிக்கை வரி போன்ற 64 துறைகள் மாநிலப்பட்டியலில் உள்ளன. இத்துறைகளில் சட்டம் இயற்றும் உரிமை பெற்றவை மாநில அரசுகள்.

(இ) பொதுப்பட்டியல்

இது மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள பொதுவான அதிகாரங்களைப் பற்றிப் பேசுகிறது. பொதுப் பட்டியலின் தொடக்கத்தில் 47 துறைகள் இருந்தன. கல்வியும் விளையாட்டும் தற்போது பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டதால் தற்போது பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் மொத்தம் 49. காடுகள், மின்சாரம், தொழிற்சாலைகள், உணவுப் பொருட்கள், திருமணம், கல்வி, விளையாட்டு உட்பட 49 துறைகள்மீது சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆகும்.

பட்டியல் -8

அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளைப் பற்றி விவரிப்பது எட்டாவது பட்டியல் ஆகும். அசாம், பெங்காளி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி என்பன எட்டாவது பட்டியல் குறிப்பிடும் மொழி களாகும். 2003-ம் ஆண்டு மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி ஆகிய நான்கு மொழிகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டன.

பட்டியல் -9 :

நீதிமன்றங்களின் மறுபரிசீலனைக்கு அப்பாற் பட்ட சட்டங்களைப் பற்றி விவரிப்பது ஒன்பதா வது பட்டியலாகும். அரசியல் சட்டத்திருத்தம் -1 இன் மூலம் 1951-ம் ஆண்டு இப்பட்டியல் இணைக் கப்பட்டது. நிலக்குத்தகை, நிலவரி, ரயில்வே, தொழிற்சாலைகள் இது போன்றவற்றின் சட்டங் களும் ஆணைகளும் இதில் உள்ளன. 9-வது பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் சட்டம் ஜமீன் தாரி ஒழிப்புச் சட்டமாகும். தமிழ்நாட்டில் 69% பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் மசோதா 1993-ல் 85-வது சட்டத்திருத்தத்தால் நிறைவேற்றப்பட்டு இப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

பட்டியல் -10 :

கட்சித் தாவல் தடைச் சட்டம் பற்றி விவரிப்பது பத்தாவது பட்டியலாகும். 1985-ம் ஆண்டு 52-வது சட்டத் திருத்தத்தின் மூலமாக இப்பட்டியல் அர சியலமைப்பில் இணைக்கப்பட்டது. இச்சட்டப்படி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தாய்க்கட்சியை விட்டு விலகி புதிய கட்சியில் சேர்ந்தாலோ, புதிய கட்சியை உருவாக்கினாலோ அவரது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். மூன்றில் ஒரு பங்கு கட்சியினர் தாய்கட்சியை விட்டு விலகினால் அச்சமயம் பதவி பறிபோகாது. அது கட்சிப்பிளவு எனக் கருதப்படும்.

பட்டியல் -11 :

பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி நிறுவனங் களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய ஆட்சி அதிகாரம் பற்றி பதினோராவது பட்டியல் விளக்குகிறது. 1992-ம் ஆண்டு, 73-வது சட்டத் திருத்தத்தின்படி, 29 துறைகளில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டியல் -12:

இது நகர்பாலிகா மற்றும் நகரப்பஞ்சாயத்து களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய அதிகாரம் தொடர்பானது பனிரெண்டாவது பட்டியலாகும். 1992-ல் 74 சட்டத்திருத்தத்தின்படி, இது அர சியலமைப்பில் சேர்க்கப்பட்டது. நகரப் பஞ்சாயத்துக்கள் 18 துறைகளில் பெற்றுள்ள அதிகாரங்கள் பற்றி இப்பட்டியலில் விளக்கப்பட்டுள்ளன.

எதிர்த்து வழக்கு போடுவதையும் இது தடை செய்தது.

இந்திய மொழிகள்

* இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன.

* ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் 33 மொழிகளை பேசுகின்றனர்.

* தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

* இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

* இந்தியாவில் பொதுவான இணைப்பு மொழியாக ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

* இந்திய அரசியலமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை 22 ஆகும்.
Posted by immanuvel devipattinam at 07:19 12 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)
இந்த தளத்தை பார்வையிடும் அனைவருக்கும் நன்றி!!

ABOUT ME

immanuvel devipattinam
View my complete profile

உள்ளடக்கம்

  • ▼  2014 (53)
    • ►  March (28)
      • ►  Mar 19 (2)
      • ►  Mar 20 (14)
      • ►  Mar 22 (3)
      • ►  Mar 24 (2)
      • ►  Mar 26 (2)
      • ►  Mar 28 (1)
      • ►  Mar 31 (4)
    • ▼  April (25)
      • ►  Apr 01 (4)
      • ►  Apr 02 (4)
      • ▼  Apr 05 (6)
        • இந்திய சினிமா வரலாறு
        • இந்திய அரசியலமைப்பு பற்றிய செய்திகள்
        • VAO இன் பணிகளும் கடமைகளும்
        • TNPSC முக்கிய பகுதிகள்
        • சில பயனுள்ள இணையதளங்கள்
        • உயிரியல் முக்கிய குறிப்புகள்
      • ►  Apr 07 (1)
      • ►  Apr 11 (1)
      • ►  Apr 12 (1)
      • ►  Apr 13 (2)
      • ►  Apr 14 (1)
      • ►  Apr 15 (1)
      • ►  Apr 18 (2)
      • ►  Apr 29 (2)
  • ►  2015 (2)
    • ►  August (2)
      • ►  Aug 24 (2)
IMMANUVEL. Picture Window theme. Theme images by i-bob. Powered by Blogger.