Tuesday 29 April 2014

நடப்பு நிகழ்வுகள்

உலகிலேயே மிக வேகமாக ஓடும் உயிரினம்

(வாஷிங்டன், ஏப். 29, 2014) உலகில் வாழும் விலங்கினங்களில் அதிவேகமாக பாய்ந்து செல்வதில் சிறுத்தை புலி முதல் இடத்தை பிடித்து இருந்தது. அது மணிக்கு 97 கி.மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டது.
ஆனால் அதன் வேகத்தை ஒரு சிறிய பூச்சி மிஞ்சி சாதனை படைத்துள்ளது. அது தெற்கு கலிபோர்னியா பூச்சி என்றழைக்கப்படுகிறது. அது சிறுத்தையை விட 20 மடங்கு அதிவேகமாக ஓடுகிறது.
இது மணிக்கு 2092 கி.மீ. வேகத்தில் ஓடுகிறது. இந்த பூச்சி இனத்தை சமீபத்தில் தான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

Friday 18 April 2014

புதிய கோள்


(18 April 2014)வான்வெளியில் தோற்றத்திலும், அளவிலும் பூமியைப் போன்று காணப்படும் புதிய கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியில் இருந்து சுமார் 490 ஒலி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கோளின் தோற்றத்தைப் பார்க்கும் போது, மிதமான வெயிலும், மிதமான குளிரும், நீர் இருப்பதற்கான ஆதாரங்களும் தெரிகின்றன.
இந்த புதிய கோளுக்கு கெப்லர் 186 எஃப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியை விட சற்று பெரியதாக, பாறைகள் நிறைந், அதிக புவிஈர்ப்பு சக்தி உள்ளதாகவும் இருக்கிறது. இது பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், இதனை மனிதன் சென்றடைவது கடினமான பணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

திரையரங்குகள் தினம் ( ஏப்ரல் 18)




உலகப் பொதுமறையெனத் திருக்குறளைச் சொன்னால், உலகப் பொது அரங்கங்கள் எனத் திரையரங்குகளைச் சொல்லலாம். திருக்குறள் ஜாதி, மத, இன, மொழி பேதமின்றி அனைவருக்கும் பொருத்தமான நல்ல விஷயங்களைச் சொன்னது. அதேபோல், எந்த ஜாதி, மதம், இனம், மொழி, பொருளாதாரம் என்று எந்த ஏற்றத்தாழ்வும் பாராட்டாமல் அனைவரும் வந்து சேர்ந்து, திரைப்படங்களைக் கொண்டாடும் இடம் திரையரங்குகளே. யோசித்துப் பாருங்கள். திரையரங்கங்களில் அனைத்துத் தரப்பு மக்களுடன் சேர்ந்து, படம் பார்க்கும் அனுபவத்திற்கு ஈடு இணையே இல்லை. அதனால்தான், மக்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக திரையரங்குகள் மாறிவிட்டன.
இன்று ஏப்ரல்,18. சினிமாவைத் தென்னிந்தியாவுக்குக் கொண்டுவந்த சாமிக்கண்ணு வின்சென்டின் பிறந்த நாள். இது ‘திரையரங்குகள் தின’மாக 80-20 மூவீஸ் கார்ப் என்ற அமைப்பால் கொண்டாடப்படுவது வரவேற்கத்தக்கது.
இயக்குனர் ரா. பார்த்திபன், 1999-ல், ஹவுஸ் ஃபுல் என்ற தேசிய விருது பெற்ற படத்தில், திரையரங்குகளின் உன்னதத்தை அருமையாகச் சொல்லியிருப்பார். தென்னிந்தியாவின் முதல் திரையரங்கை தமிழகத்தில் நிறுவி தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட்.
ரயில்வே ஊழியரின் தொடர் பயணம்
லூமியர் சகோதரர்கள், பாரிஸில் முதன் முறையாக ஒரு திரைப்படத்தைக் காண்பித்த 10 வருடங்கள் கழித்து, 21 வயதே ஆன சாமிக்கண்ணு வின்சென்ட், கோயம்புத்தூரில் ஒரு சினிமா இயக்கத்தைத் தொடங்கினார். தென்னிந்திய ரயில்வேயில் மாதம் ரூபாய் 25 சம்பளம் வாங்கிக்கொண்டு, திருச்சியில் குமாஸ்தாவாக வேலை செய்துவந்த அவர், மவுன சினிமாவின் சுவையை, இந்தியா வந்திருந்த டு பான்ட் என்ற பிரெஞ்சு விநியோகஸ்தர் மூலம் அறிந்து கொண்டார். பிப்ரவரி 1905-ல், அந்த பிரெஞ்சுக்காரர் உடல்நிலை சரியில்லாமல் தாயகம் திரும்ப முடிவு செய்தபோது, அவருக்கு நண்பராக இருந்த வின்சென்ட், மிகுந்த கஷ்டங்களுக்கு இடையில், ரூபாய் 2250-ஐ ஏற்பாடு செய்து, டு பான்டிடம் இருந்த டூரிங் சினிமா புரொஜக்டரையும், திரையையும், மவுனப் படங்களையும், மீதம் உள்ள கருவிகளையும் வாங்கினார். இவற்றைக் கொண்டு சினிமாவைத் தென்னிந்தியாவுக்கு 1905-ல் அறிமுகம் செய்தார்.
18 ஏப்ரல் 1883-ல் கோயம்புத்தூரில் பிறந்த வின்சென்ட் அதன் பிறகு திரைப்படங்களுடன் பயணிக்கத் தொடங்கினார். முன்னோடியான ‘லைஃப் ஆஃப் ஜீஸஸ்’ என்ற மவுனப் படத்துடன் தொடங்கிய இந்தப் பயணம் பல ஆண்டுகள் தொடர்ந்தது. சினிமா மீது இருந்த மோகத்தால், தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அந்த டூரிங் சினிமாவை அவர் இந்தியாவின் பல இடங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் (மலேசியா, லாகூர், பெஷாவர், மியான்மர் / பர்மா, ஆப்கானிஸ்தான்) கொண்டுசென்றார். கோயம்புத்தூருக்கு அருகில் டென்ட் போட்டுத் திரைப்படங்களைக் காண்பிக்க ஆரம்பித்துப் பெருவாரியான மக்களைக் கவர்ந்தார். அவரின் இந்த முயற்சியால், ‘டென்ட் சினிமா’ மிகவும் பிரபலமானது. பிறகு 1905-ல் வின்சென்ட் முதல் டென்ட் சினிமாவை சென்னையில், எஸ்பிலனேட் என்ற பகுதியில், ‘எடிசன் கிராண்ட் சினிமா மெகாபோன்’ என்ற பெயரில் தொடங்கி மக்களுக்கொரு பொழுதுபோக்கு அரங்கை உருவாக்கினார்.
கொடுத்து வைத்த கோவை நகரம்
ஆசியா முழுவதும் பயணம் செய்தபின், முதல் நிரந்தரத் திரையரங்கை கோயம்புத்தூரில் 1914-ல், வெரைட்டி ஹால் டாக்கீஸ் என்ற பெயரில் (தற்போது டிலைட் என்ற பெயரில் இயங்கி வருகிறது) நிறுவினார். அதுவே, தென்னிந்தியாவில் முதல் நிரந்தரத் திரையரங்கமாக உருவானது. திரையரங்கில் உள்ள மாய சக்தியைத் தென்னிந்தியாவில் கோயம்புத்தூர் மக்களே முதலில் அனுபவித்தனர்.
ஒரு திரையரங்கில் ஆரம்பித்து, 12 திரையரங்குகளை
வின்சென்ட் கோயம்புத்தூரில் நிறுவினார். அத்துடன், ‘வள்ளித் திருமணம்’ என்ற படத்தை 1933-ல் தயாரித்து வெளியிட்டுப் பெரும் வெற்றிகண்ட வின்சென்ட், மேலும் சில படங்களை சென்ட்ரல் ஸ்டூடியோவுடன் இணைந்து தயாரித்தார். இந்த வருடம் நூற்றாண்டு (1914-2014) காணும் முதல் தென்னிந்தியத் திரையரங்கைக் கொண்டாட வேண்டிய நேரம் இது. அத்துடன், தென்னிந்தியாவுக்கு சினிமாவை அறிமுகம் செய்த சாமிக்கண்ணு வின்சென்ட்டை தென்னிந்தியா சினிமாவின் தந்தையாக அங்கீகரித்து அவரின் பிறந்த தினமான இன்றைய நாளை சினிமாவை நேசிக்கும் அனைவரும் கொண்டாட வேண்டும்.
ஏன் இந்த நிலை?
வின்சென்ட்டால் துவக்கப்பட்ட இந்த நிரந்தரத் திரையரங்குகள் புரட்சி தமிழகம் முழுவதும் பரவி, ஒரு காலகட்டத்தில் 2,000 திரை அரங்குகளுக்கு மேல் ஏற்படுத்தப்பட்டு, தமிழ் சினிமாவுக்கு வசந்த காலத்தை ஏற்படுத்தியது. தொழில் நுட்ப முன்னேற்றங்களுக்கு பின், 1990-முதல் திரையரங்கு களின் வசந்த காலம் மாறிப் பல சோதனைகளைச் சந்தித்துவருகிறது. பொழுதுபோக்கிற்குத் திரையரங்குகள் மட்டுமே என்றிருந்த நிலைமை, தொலைக்காட்சி வந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, 2000 ஆண்டுக்குப் பின் அதன்
ஆதிக்கம் பெரிதாகி இன்று தொலைக்காட்சிக்குப் பின் திரையரங்குகள் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதனுடன், கேபிள் டிவி சேனல்கள், டிவிடிகள் (திருட்டு டிவிடிகளும் சேர்ந்து), இணையதள இலவச வீடியோக்கள், என்று பல விதமாகப் புதுத் திரைப்படங்களை மக்கள் வீட்டில் இருந்தே பார்க்கிறார்கள். மிகவும் எதிர்பார்க்கப்படும் படத்திற்கு மட்டுமே திரையரங்குகளுக்கு வரும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. பார்வையாளர்கள் குறைய ஆரம்பித்த பின், பல திரையரங்குகள், இன்று வணிக வளாகங்களாக மாறி வருவது (சென்னையில் மட்டும் சன், அலங்கார், வெலிங்டன், ஆனந்த், சபையர், உமா என பல பிரபல அரங்குகள்) தமிழ் சினிமாவுக்குச் சோதனையை ஏற்படுத்தியுள்ளது.
அதனுடன், கேபிள் டிவி சேனல்கள், டிவிடிகள் (திருட்டு டிவிடிகளும் சேர்ந்து), இணையதள இலவச வீடியோக்கள், என்று பல விதமாகப் புதுத் திரைப்படங்களை மக்கள் வீட்டில் இருந்தே பார்க்கிறார்கள். மிகவும் எதிர்பார்க்கப்படும் படத்திற்கு மட்டுமே திரையரங்குகளுக்கு வரும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. பார்வையாளர்கள் குறைய ஆரம்பித்த பின், பல திரையரங்குகள், இன்று வணிக வளாகங்களாக மாறி வருவது (சென்னையில் மட்டும் சன், அலங்கார், வெலிங்டன், ஆனந்த், சபையர், உமா என பல பிரபல அரங்குகள்) தமிழ் சினிமாவுக்குச் சோதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும் கடந்த 5 வருடங்களில், மல்டிபிளக்ஸ் எனப்படும் பல திரையரங்குகள் உள்ளடக்கிய, எல்லா வசதிகளும் கொண்ட பொழுதுபோக்கு வளாகங்கள் தமிழகத்தின் பெருநகரங்களில் உருவாகிவருவது, நல்ல ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திவருகிறது. 1,000 இருக்கைகள் கொண்ட திரை அரங்குகள் இனிமேல் எடுபடாது. எனவே மினிபிளக்ஸ் என்ற அமைப்பின் மூலம், 400 முதல் 500 இருக்கைகள் மட்டும் கொண்ட இரண்டு அல்லது மூன்று அரங்கங்கள் கொண்ட வளாகங்களை எல்லாச் சிறு நகரங்களிலும் ஏற்படுத்துவது, திரையரங்கு வியாபாரத்தை லாபகரமாக நடத்த உதவும்.
தேவை திரையரங்குகள்
ஏழு கோடி மக்கள் கொண்ட தமிழகத்தில், 1,000-க்கும் குறைவாகவே திரையரங்கங்கள் இருப்பது நல்ல சூழ்நிலை அல்ல. அமெரிக்காவில், பத்து லட்சம் மக்களுக்கு, 117 திரையரங்கங்கள் என்ற அளவில் உள்ளன. தமிழகத்தில், பத்து லட்சம் மக்களுக்கு 13 திரையரங்குகள். அமெரிக்காவின் அளவுகோலின்படி பார்த்தால் தமிழகத்தில், 8,000-க்கும் மேல் திரையரங்கங்கள் இருக்க வேண்டும். 2020-ல் குறைந்தது, 2,000 திரையரங்கங்களாவது தமிழகம் காண, அரசாங்கமும், திரையுலகமும் முயற்சி செய்தால், தமிழ்த் திரையுலகம் பெரிய வளர்ச்சியைக் காணலாம்.
மல்டிபிளக்ஸ் புரட்சி மூலம், இந்தி சினிமா இன்று பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. அதே போல், தமிழ் சினிமாவில் பல புது முயற்சிகளுக்கு வழி வகுக்க, அனைத்து நகரங்களிலும் மல்டிபிளக்ஸ் / மினிபிளக்ஸ் என்ற புரட்சி ஏற்பட்டு, தமிழகம் 2,000 திரையரங்கங்களை 2020-ல் காண வேண்டும் என்ற உறுதிப்பாட்டினை சாமிக்கண்ணு வின்சென்ட்டை நினைவுகூரும் இந்த நாளில் மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும்

Monday 14 April 2014

இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்



                                                               இந்திய திட்டக் குழு என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் இந்திய அரசின் ஒரு அமைப்பாகும்.
1950 மார்ச் 15-ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் வளங்களைக் கணக்கிட்டும், குறைவான வளங்களைப் பெருக்கியும், சமச்சீரான வகையில் அதனை பயன்படுத்த திட்டமிடுவதே இதன் முக்கிய பணியாகும். இந்த அமைப்பின் முதல் தலைவர் ஜவகர்லால் நேரு ஆவார்.
முதல் ஐந்தாண்டுத் திட்டம் 1951-ல் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்பட்டது ஆனால் இந்தியா பாகிஸ்தானின் போரால் 1965ல்
தடைபட்டது. அடுத்த இரண்டாண்டுகள் வரட்சியும், நாணய மதிப்பிழப்பும், விலையேற்றமும், வளம் குன்றலும் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இடையூராகயிருந்தது. அடுத்து மூன்று ஆண்டுத் திட்டங்கள் 1966 முதல் 1969 வரை போடப்பட்டு, நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் 1969ல் தொடங்கப்பட்டது.
1990-91ல் நிலையில்லாத, அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்த மத்திய அரசியலால் எட்டாவது ஐந்தாண்டுத்திட்டம் 1990-ல் தொடங்கப்படவில்லை. அதனால், 1990-91 மற்றும் 1991-92 ஆண்டுகளை ஆண்டுத் திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. 1992ல் எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. முதல் எட்டு ஐந்தாண்டுத் திட்டங்களும் பொதுத்
துறையில் கவனம் செலுத்தப்பட்டு அடிப்படை மற்றும் கனரக தொழிலில் முதலீடு செய்யப்பட்டது ஆனால் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து பொதுத் துறையில் கவனம் குறைக்கப்பட்டு, தற்போது பொதுவான தேசிய வளர்ச்சியை நோக்கித் திட்டமிடப்படுகிறது.
அமைப்பு:
திட்டக்குழுவின் தலைவராக நாட்டின் பிரதமரும், நியமன அடிப்படையில் மத்திய அமைச்சருக்கு நிகரான அதிகாரத்தில் துணைத் தலைவரும், இதர துறை சார்ந்த நிரந்தர உறுப்பினர்களும் மற்றும் பகுதிநேர உறுப்பினர்களும் இதன் அங்கத்தினர்கள்.
பொருளாதாரம், தொழிற்துறை, அறிவியல் மற்றும் பொது நிர்வாக வல்லுநர்களே நிரந்தர உறுப்பினர்களாகவும், முக்கிய அமைச்சகத்தின் அமைச்சர்கள் பகுதிநேர உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள். இதன் மூல நிறுவனம் இந்திய நிதி அமைச்சகம் ஆகும்.
பணிகள்:
1950ல் இந்திய அரசு கொண்டுவந்த தீர்மானத்தின் படி திட்டக்குழுவின் பணிகள் கீழ்கண்டவாறு:
* தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட நாட்டின் பொருள், மூலதனம் மற்றும் மனித வளங்களை அடையாளங்கண்டு நாட்டின் தேவைக்குக் குறைவானவற்றை அதிகரிக்கச் செய்தல்
* நாட்டின் வளங்களை மிகவும் பயனுள்ள மற்றும் சமச்சீரான பயன்பாட்டுக்கு ஏற்றப்படி திட்டமிடல்.
* முன்னுரிமைகளின் அடிப்படையில் வளங்களை ஒதிக்கீடு செய்து திட்டமிடல், கட்டங்களை வரையறை செய்தல்.
* பொருளாதார வளர்ச்சியைத் தாமதப்படுத்தும் காரணிகளை அடையாளம் காணுதல்.
* திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான சரியான சமூக மற்றும் அரசியல் நிலைமைகளைத் தீர்மானித்தல்.
* திட்டத்தின் வெற்றிகரமான ஒவ்வொரு நிலைக்கும் தேவைப்படும் போதிய இயந்திரங்களைக் கண்டறிதல்.
* ஒவ்வொரு கால நிலையிலும் திட்ட வளர்ச்சியை மதிப்பீடு செய்து, மேலும் வெற்றிக்குத் தேவையான அளவீடு மற்றும் கொள்கை ரீதியாக ஆலோசனை வழங்குதல்.
* மத்திய, மாநில அரசுகளின் பிரச்சனைகளை ஆராய்ந்து, அல்லது நடப்பு பொருளாதார நிலை, கொள்கை, வளர்ச்சித் திட்டங்களின் சாதகநிலைகளுக்கேற்ப இடைக்கால
அல்லது துணைப் பரிந்துரைகள் அளித்து வளர்ச்சியை சீராக்குதல்.
திட்டக் குழு:
அமைப்பு தலைமை: பிரதமர். மன்மோகன் சிங், தலைவர்
துணைத் தலைவர்: மான்டெக் சிங் அலுவாலியா
முதலாம் ஐந்தாண்டுத் திட்டம்:(1951-1956)
இந்திய அரசு தனது முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் , உணவு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.விவசாயம் மற்றும் சமுதாய மேம்பாடு, பாசனம் மற்றும்
மின்னுற்பத்தி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை, சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதே முதல் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்த்தது.
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1956-1961)
கிராமப் புற இந்தியாவை சீரமைத்தல் , தொழல் துறை வளர்ச்சிக்கான அடிக்கல்லை நாட்டுதல், பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்காக அதிக பட்ச வாய்ப்புகளை உருவாக்குதல்
மற்று நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீராக வளர்ச்சி அடைவதை உறுதிசெய்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாக இருந்தன.
மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்(1961-1966)
முதல் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்களின் நீட்சியாக இத்திட்டம் அமைந்தது. மேலும் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை நோக்கி இந்திய மக்களை
இட்டுச்செல்லும் வழிகாட்டியாகவும் இது அமைந்தது.
ஒராண்டுத் திட்டங்கள் 1966 - 67, 1967 - 68, 1968 - 69 - பொருளாதார சிக்கலை நீக்கி சீரான வளர்ச்சி அடைதல்.
நான்காம் ஐந்தாண்டுத் திட்டம்(1969-1974)
மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமின்றி ஈட்டப்பட்ட செல்வத்தை மக்கள் அனைவருக்கும் சமமாகப் பிரித்து வழங்குவதும் முதலிடத்தைப் பெற்றன.
நாட்டின் செல்வமும் பொருளாதார சக்தியும் சில இடங்களில் மட்டுமே குவிந்திருக்காமல் அவற்றைப் பரவலாக்குவது தலையாய பனி ஆயிற்று.
ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம்(1974-1979)
உலக அளவில், உணவுப் பொருட்கள், உரம் போன்ற விவசாய இடுபொருட்கள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் பெரிதும் உயர்ந்தன. பணவீக்கத்தைக்
கட்டுப்படுத்துவது அவசரத்தேவையாக இருந்தது.1974-75 இன் மத்தியில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பிற நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் (1980-1985)
வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைக் களைதல் ஆகியவை இத திட்டத்தில் முதலிடம் பெற்றன.
ஏழாம் ஐந்தாண்டுத் திட்டம் (1985-1989)
உணவு தானிய உற்பத்தி,வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் மக்களின் உற்பத்தித் திறனைப் பெருக்குதல் போன்றவை முக்கியத்துவம் பெற்றன.
ஒராண்டுத் திட்டங்கள் - 1990 - 91, 1991 - 92
எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1992-1997)
உணவு உற்பத்தியில் இந்திய நாடு ஏறத்தாழ தன்னிறைவு அடைந்துவிட்டது. தொழில் துறை மற்றும் சேவை வழங்கும் துறைகளும் நன்கு முன்னேறி இருந்தன. ஆனால்
நிதிப்பற்றாக்குறை, பொதுக்கடன், நலிந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் ஆகியவற்றை எதிர்த்துப் போரிட வேண்டிய
அவசியம் உருவாகிவிட்டது. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கீழ்காண்பவை முன்னுரிமை பெற்றன.
* அதிகமான அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதன் மூலம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் முழு அளவு வேலைவாய்ப்பினை எட்டுதல்
* மக்களின் ஒத்துழைப்பின் மூலமும் ஊக்கத்திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை விளக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல்
* அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளித்தல் மற்றூம் 15 முதல் 35 வயது வரை உள்ள மக்களிடத்து காணப்படும் எழுத்தறிவின்மையைப் போக்குதல்
* அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல்,அடிப்படை மருத்துவ வசதிகளை அளித்தல் , நோய் தடுப்பு முறைகளை அளித்தல் மற்றும் தோட்டிப் பணிகளை அற்வே ஒழித்தல்
* விவசாய வளர்ச்சி, பல்வகைப் பயிர்களைப் பயிரிடல் மற்றும் ஏற்றுமதி செய்யக் கூடிய அளவுக்கு தானிய உற்பத்தியைப் பெருக்குதல்
* மின்னாற்றல், போக்குவரத்து, தவகவல் தொடர்பு மற்றும் பாசனம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி வளர்ச்சிப் பணிகளைத் தடையின்றி நீடிக்கச் செய்தல்.
ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம் (1997-2002)
பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கும் இடையில் உள்ள ஒருங்கிணைந்த உறவை ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் அங்கீகரித்தது. காலங்காலமாக
நிலவி வரும் சமுதாய வேறுபாடுகளைக் களைந்து ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்கு ஆதரவு அளிக்கும் கொள்கைகளை உருவாக்குவதில் அரசு உறுதியாக உள்ளது.
"சமூக நீதி மற்றும் சமத்துவத்துடன் இணைந்த வளர்ச்சி " என்பதே இத்திட்டத்தின் தாரக மந்திரம்.
ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக தேசிய வளர்ச்சிக் குழு கீழ்காண்பவற்றைக் குறிப்பிட்டுள்ளது.
* வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் வறுமையை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்தல்.
* விலைவாசிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதே நேரத்தில் வளர்ச்சி வேகத்தை அதிகரித்தல்
* அனைவருக்கும் குறிப்பாக பின்தங்கிய சமூகத்தினருக்கு - உணவு மற்றும் சத்துணவை உறுதி செய்தல்
* அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர், அடிப்படை சுகாதார வசதிகள், அடிப்படைக் கல்வி, தங்குமிடம் ஆகியவற்றை குறித்த கால வரையறைக்குள் உறுதி செய்தல்
* மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்
* அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பின் மூலம் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப் படாமல் காத்தல்
* பெண்கள் மற்றும் சமுதாயத்தில் பின் தங்கிய - அட்டவனை இன மக்கள், பிற பின் தங்கிய இனத்தவர்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர் ஆகியோருக்கு அதிகாரம்
வழங்குதல்
* பஞ்சாயத்து ராஜ், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க ஊக்கப்படுத்துதல்
* சுய சார்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துதல்.
பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் (2002-2007)
பத்து விழுக்காடு வேகத்தில் உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரத்தை மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
முதலீட்டாளர்களுக்கு இணக்கமான சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல் ஆகியவை முன்னுரிமை பெற்றன. தனியார்
துறையினர் , பொருளாதார வளர்ச்சியில் துடிப்புடன் பங்கேற்பதையும் நிதித்துறையில் அயல்நாட்டினர் அதிக அளவில் பங்கேற்பதையும் அரசு வரவேற்றது. வர்த்தக
நிறுவனங்கள் வெளிப்படையுடன் செயல்படுவதற்கும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அதிக ஊக்கம் அளிக்கப்பட்டது. வறுமையை ஒழித்தல்;
கல்வியைப் பரப்புதல் ஆகியவை அதிக கவனம் செலுத்தல். 2007-ஆம் ஆண்டு வாக்கில் வனப்பரப்பை 25 சதவிகிதம் அளவுக்கு உயர்த்துதல்; அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல்.
* வறுமையைக் குறைப்பது
* வேலைவாய்ப்பைப் பெருக்குவது
* 2007 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை எட்டச் செய்வது
* மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை 16.2 விழுக்காடாகக் குறைப்பது
* 2007 ஆம் ஆண்டுக்குள் கல்வி ஏற்றோர் எண்ணிக்கையை எழுபத்தைந்து விழுக்காடாக உயர்த்துவது
* குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பது
* பேறுகாலத்தில் பெண்கள் இறக்கும் விகிதத்தைக் குறைப்பது
* வனப் பரப்பை அதிகரிப்பது
* 2012 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழி செய்தல்
* மாசு பட்ட அனைத்து ஆறுகளையும் 2007 ஆம் ஆண்டுக்குள் தூய்மைப் படுத்துவது.
பதினோராம் ஐந்தாண்டுத் திட்டம் (2007-2012)
* மொத்த உள் நாட்டு உற்பத்தியை பத்து விழுக்காடு அளவுக்கு உயர்த்துதல்
* 700 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்; ஆரம்பப் பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்துதல்
* குழந்தை இறப்பு விகிதத்தை 28 சதவிகிதமாக குறைத்தல்
* அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்குதல்
* வனப் பரப்பளவை 5 சதவிகிதம் அளவுக்கு உயர்த்துதல்.


நடப்பு பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012–2017) நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கு சராசரியாக 8% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007–12) சராசரி வளர்ச்சி விகிதம் 7.9% ஆக இருந்தது. பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 8.2 சதவீத சராசரி வளர்ச்சி காண முதலில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இது சாத்தியமில்லை என கருதிய தேசிய வளர்ச்சி கவுன்சில் இலக்கை 8 சதவீதமாக குறைத்தது. டிசம்பர் 27–ந் தேதி ஐந்தாண்டு திட்ட வரைவு ஆவணத்திற்கு வளர்ச்சி கவுன்சில் அங்கீகாரம் அளித்தது. அப்போது பொருளாதார வளர்ச்சி இலக்கும் குறைக்கப்பட்டது. உலக வங்கியின் தலைமை பொருளியல் வல்லுனர் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 6 சதவீத அளவிற்கே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். நடப்பு நிதி ஆண்டின் (2012–13) முதல் ஆறு மாதங்களில் (ஏப்ரல்–செப்டம்பர்) பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாக இருந்தது.

Sunday 13 April 2014

VAO மாதிரி வினா விடைகள்








மாதிரி வினா விடை 1

மாதிரி வினா விடை 2

மாதிரி வினா விடை 3

மாதிரி வினா விடை 4

மாதிரி வினா விடை 5

மாதிரி வினா விடை 6

 மாதிரி வினா விடை 7

 மாதிரி வினா விடை 8

மாதிரி வினா விடை 9

 மாதிரி வினா விடை 10

மாதிரி வினா விடை 11

மாதிரி வினா விடை 12

மாதிரி வினா விடை 13

மாதிரி வினா விடை 14

மாதிரி வினா விடை 16

மாதிரி வினா விடை 17

மாதிரி வினா விடை 18

மாதிரி வினா விடை 19

மாதிரி வினா விடை 20

மாதிரி வினா விடை 21



VAO மாதிரி வினாக்கள் ( click here)




மாதிரி வினா விடைகள்

Monday 7 April 2014

பெயர்மாற்றம் செய்யப்பட்ட நாடுகள்

  1. அப்பர் வோல்டா — புர்க்கினா பாஸோ
  2. அபிசீனியா — எத்தியோப்பியா
  3. கோல்டு கோஸ்ட் — கானா

  4. 105.பசுட்டோலாந்து — லெசதொ

  5. 106.தென்மேற்கு ஆப்பிரிக்கா — நமீபியா

  6. 107.வட ரொடீஷியா — ஜாம்பியா

  7. 108.தென் ரொடீஷியா — ஜிம்பாப்வே

  8. 109.டாங்கனீகாம,சன்ஸிபார் — தான்சானியா

  9. 110.கோட்டே டி ஐவோயர் — ஐவரி கோஸ்ட்

  10. 111.சாயிர் — காங்கோ

  11. 112.சோவியத்யூனியன் — ரஷ்யா

  12. 113.பர்மா — மியான்மர்

  13. 114.கிழக்கு பாக்கிஸ்தான் — பங்க்களாதேஷ்

  14. 115.சிலோன் — ஸ்ரீலங்கா

  15. 116.கம்பூச்சியா — கம்போடியா

  16. 117.பாரசீகம்,பெர்ஷியா — ஈரான்

  17. 118.மெஸமடோமியா — ஈராக்

  18. 119.சயாம் — தாய்லாந்து

  19. 120.பார்மோஸ — தைவான்

  20. 121.ஹாலந்து — நெதர்லாந்து

  21. 122.மலாவாய் — நியூசிலாந்து

  22. 123.மலகாஸி — மடகாஸ்கர்

  23. 124.பாலஸ்தீனம் — இஸ்ரேல்

  24. 125.டச் ஈஸ்ட் இண்டீஸ் — இந்தோனேசியா

  25. 126.சாண்ட்விச் தீவுகள் — ஹாவாய்

  26. 127.அப்பர் பெரு — பொலிவியா
  27. 128.பெக்குவானாலாந்து — போட்ஸ்வா
  28.  

Saturday 5 April 2014

உயிரியல் முக்கிய குறிப்புகள்



மரபும் பரிணமாமும்
*  மெண்டல் தோட்டப் பட்டாணி (பைசம் சட்டைவம்) செடியில் 7 வகையான மாற்று உருவ வேறுபாடுகளை கண்டறிந்தார்.
*  ஆதி மனிதன் தோன்றியது - ஆப்பிரிக்கா
*  பாரம்பரியத் தன்மைக் கொண்டது -  மரபணு மாற்றம் செய்யப்பட்ட விந்தணு
*  இயற்கைத் தேர்வு கோட்பாட்டை வெளியிட்டவர் - சார்லஸ் டார்வின்
*  உடற்செல் ஜீன் சிகிச்சை முறை என்பது உடற்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
*  பண்பு கடத்தலில் பங்கு பெறும் மரபுப் பொருள் - னுயேயு
*  பாரம்பரிய கடத்துதலை முதன்முதலாக வெளியிட்டவர் - கிரிகர் ஜோகன் மெண்டல்
*  ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மை - அல்லீல்கள்
*  உயிரித் தொழில்நுட்ப முறையில் பெறப்படும் வைட்டமின் டி12 குணப்படுத்தும் நோய் -  பெர்னீயஸ் இரத்த சோகை.
*  உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதியை விளக்கியவர் - லாமார்க்
*  உடல் மூலச் செல்கள் எவற்றில் இருந்து பெறப்படுகிறது? - எலும்பு மஜ்ஜை
*  வைரஸ்களுக்கு எதிரான புரதம் - இன்டர்பெரான்
*  நைட்ரஜன் நிலைநிறுத்தப் பயன்படுவது - நிஃப் ஜீன்
*  டி.என்.ஏ.வின் வெட்டப்பட்ட துண்டங்களை ஒட்ட வைக்கப் பயன்படும் மூலக்கூறு பசை - னுயேயு லிகேஸ்
*  வினிகர் உற்பத்தி செய்யப் பயன்படும் அமிலம் - அசிட்டிக் அமிலம்
*  ஸ்டிராய்டுகள் - லிப்பிடுகளிலிருந்து பெறப்பட்டவைகளாகும்.
*  புற்று நோய்க்கு எதிராக பயன்படும் ஓரினச் செல் எதிர்ப்பு பொருள் - மானோ குளோனியல் எதிர்ப்புப் பொருள்.
*  இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் - பீட்டா செல்கள்.
*  இரத்த குளுக்கோஸ் அளவை கணக்கிடப் பயன்படுவது - உயிரி உணரி
*  உயிரியல் கணிப்பொறிகளை உருவாக்கப் பயன்படுவது - உயிரிச்சிப்புகள்
*  அல்லீல் என்பது ஒரே ஜீனின் மாற்றுவெளிப்பாடு ஆகும்.
*  அல்லீலோ மார்புகள் என்பது அல்லீல்களுடைய எதிர்ப்பண்பமைப்பு ஆகும்
*  ஜூன் காரணிகள் இயற்பியல் சார்ந்த பாரம்பரியக் காரணிகள் ஆகும்.
*  புறத்தோற்ற பண்புகளுக்கு பீனோடைப் என்று பெயர்
*  உடலுறுப்பு பயன்பாடு விதியை கூறியவர் - ஜீன் பாப்தீஸ் லாமார்க்
*  ரெஸ்ட்ரிகீன் எண்டோ நியூக்ளியேஸ் வரையறை நொதிகள் - னுயேயு வெட்ட உதவுகிறது
*  மூலச் செல் என்பது - (மாறுபாடு அடையாத செல் குழுமம்)
*  நீரிழிவு நோய் இன்சுலின் செலுத்துதல் மூலம் குணமடைகிறது
*  உயிரியல் வினையூக்கி என்றழைக்கப்படுபவை - நொதிகள்
*  மனித சிற்றினத்தின் பெயர் - ஹோமோசெபியன்
*  மனித முன்னோடிகள் - ஹோமினிட்டுகள்
*  னுயேயு தொழில் நுட்பம் - மரபுப் பொறியியல் என்றழைக்கப்படுகிறது.
*  மெண்டலின் ஒரு பண்பு கலப்பு விகிதம் - 3:1
நோய்தடைக்காப்பு மண்டலம்
*  சரியான நலத்தின் பரிணாமம் - தினமும் தன் கடமையினை செய்தல், மகிழ்ச்சியாக இருத்தல்.
*  சமூகத்தில் சுமூகமற்ற பரிமாணம் -  சாதாரண செயல்களிலும் கடுமையாக நடந்து கொள்ளுதல்.
*  பாக்டீரியாவால் உண்டாகும் நோய்? - இரணஜன்னி
*  காற்றின் மூலம் பரவும் நோய் -  காசநோய்
*  மிகக் கடுமையான மலேரியாக்காய்ச்சலை உருவாக்கும் கிருமி - பிளாஸ்மோடியம் பால்சிபாரம்.
*  நமது உணவுக் குடல் பகுதியில் நோய் உண்டாக்கும் நுண்ணூயிரி - எண்டமீபா ஹிஸ்டலைடிகா.
*  மறைமுகமாக நோய் பரவும்முறை -  நோயாளி பயன்படுத்தும் உடமைகள்.
*  பிற உயிரிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எதிர்பொருட்கள், மனிதருக்கு நோய் தடுப்பூசியாகப் போடப்படுகிறது. இது எவ்வகை தடுப்பூசி முறை - செயற்கையான மந்தமான நோய்த்தடுப்பு முறை
*  பிறந்த குழந்தைக்கு முதலில் கொடுக்கப்படும் நோய்த்தடுப்பூசி -
*  எதிர் தோன்றி (ஆண்டி ஜென்) இல்லாதது எது? - தாய்ப்பால்.
*  மனிதனின் இரத்த சர்க்கரை அளவு உணவுக்கு முன்னர் - 80 - 120, பின்னர் 100
*  மராசுமஸ் மற்றும் குவரியோர்கர் நோய்க்கான காரணம் - புரத குறைபாடு.
*  தோலில் மெலனின் நிறமி இல்லாமையால் தோன்றும் குறைபாடு - அல்பினோ.
*  சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸ் - ரைனோ
*  காசநோயை (எலும்புருக்கி நோய்) உருவாக்குவது - மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ்
*  டைபாய்டு நோயை உண்டாக்கும் காரணி -  சாலமெனெல்லா டைப்பி
*  மலேரியா நோயை உண்டாக்கும் காரணி - பிளாஸ்மோடியம்
*  அமீபிக் சீதபேதியை உருவாக்கும் நுண்ணுயிரி - எண்டமீயா ஹிஸ்டலைடிகா
*  எய்ட்ஸ் நோய்க்கான காரணி எச்ஐவி வைரஸ்
*  எச்ஐவியை கண்டறயும் ஆய்வு - எலைசா.
*  உடலில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் செல் - பீட்டாசெல்
*  ஆல்பா செல்கள் குளுக்கோகானை சுரக்கின்றன.
*  படர்தாமரை பூஞ்சைகளால் வரக்கூடியது.
தாவரங்களில் இனப்பெருக்கம்
*  ஒரு செல் உயிரிகளை அமீபா மற்றும் பாக்டீரியங்களில் நடைபெறும் இனப்பெருக்க வகைகளில் ஒன்று -  இரண்டாகப் பிளத்தல்
*  பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு - மகரந்தச்சேர்க்கை
*  பூஞ்சைகளில் உண்டாகும் ஒர் உட்கரு கொண்ட நகரும் திறனற்ற பாலிலா ஸ்போர்கள், கொனிடியா.
*  கருவுற்ற சூற்பை கனி ஆகும். ஒரு மலரின் பல இணையாத சூலக இலைகள் கொண்ட மேல்மட்ட சூற்பையிலிருந்து உருவாகும் கனி - திரள் கனி
*  நீரில் ஊறவைத்த விதையை அழுத்தும்போது இதன் வழியாக நீர் கசிகிறது - மைக்ரோபைல்
*  மாங்கனி கல்போன்ற கனி என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் உள்தோல் கடினமானது.
*  கருவில் வேர் உருவாகும் பகுதிக்கு முளைவேர் என்று பெயர்
*  காற்றின் மூலம் கனி பரவுதலுக்கான சரியான கூற்று - டிரைடாக்ஸ் தாவரத்தில், புல்லி வட்டம், பாப்பஸ் துவிகளாக மாறிக் கனி பரவுதலுக்கு உதவுகிறது.
*  மூவிணைவினால் உண்டாகும் சிசு, கருவில் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்க வல்லது - கருவூண்
*  தன் மகரந்த சேர்க்கையின் தீமை - விதைகள் குறைந்த எண்ணிக்கையில் உண்டாகின்றன.
*  பாலைத்தயிராக மாற்றும் பாக்டீரியா - லேக்டோ பேசிலஸ்
*  கட்டிப் போட்டால் குட்டிப்பேடும் தாவரம் - பிரையோஃபில்லம்.
*  ஹைடிராவில் நடைபெறும் இனப்பெருக்கமுறை -  அரும்புதல்
*  ஆல்காக்களில் காணப்படும் நகரும் தன்மையற்ற ஸ்போர்கள் -- ஏபிளனோஸ்போர்கள்
*  மலரின் ஆண்பாகம் - மகரந்தத்தாள் வட்டம்
*  நகரும் தன்மையற்ற ஸ்போர்கள் - கொனிடியா
*  மகரந்தப்பையிலிருந்து மகரந்த தூள்கள் சு10லக முடியை சென்றடையும் செயல் - மகரந்த சேர்க்கை
*  ஒரு மலரின் மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை சென்றடையும் நிகழ்ச்சி - ஆட்டோகேமி
*  அயல் மகரந்த சேர்க்கைக்கு மறுபெயர் - அல்லோகேமி
*  பறவைகளின் வழி மகரந்த சேர்க்கைக்கு ஆர்னிதோஃபிலி என்று பெயர்
*  முழுமையடைந்த கருவுற்ற முட்டை - சைகோட்
*  கருவுறுதலுக்குப்பின் சூல் விதை ஆகவும், சூல் உறைகள் கனி ஆகவும் மாறும்
*  கருவுற்ற முதிர்ந்த சூற்பை கனி எனப்படும்.
*  கருவுறாக் கனிகள் பார்த்தினோ கார்பிக் கனிகள் எனப்படும்.
வாழ்க்கை இயக்கக் செயல்கள்
*  மானோட்ரோபாவில் உணவுப் பொருட்கள் உறிஞ்சுவதற்கான சிறப்பான வேர்கள் - மைக்கோரைசா வேர்கள்
*  ஈஸ்ட்டின் காற்றிலா சுவாசத்தினால் உண்டாவது - எத்தனால்
*  நீர்த் தேவைக்காக தென்னையின் வேர்கள், தாய்த் தாவரத்தை விட்டு வெகு தொலைவில் உள்ளன - நீர் சார்பு இயக்கம்
*  தாவரங்களில் சைலத்தின் பணி - நீரைக்கடத்துதல்
*  தற்சார்பு ஊட்ட முறைக்கு தேவைப்படுவது -  நீர், பச்சையம், சூரியஒளி இவை அனைத்தும்
*  செல்லுக்கு வெளியே செரித்தல் நிகழும் குடல் பகுதி - லூமன்
*  ஒட்டுண்ணித் தாவரங்கள் கொண்டுள்ள சிறப்பான வேர்களுக்கு - ஹாஸ்டோரியம் என்று பெயர்
*  நொதி என்பது உயிர்கிரியா ஊக்கி
*  காற்றிலா சுவாசம் நொதித்தல் என அழைக்கப்படுகிறது.
*  ஆற்றல் நாணயம் என அழைக்கப்படுவது - யுவீ
*  மீன்கள் செவுள்கள் மூலம் சுவாசிக்கிறது.
*  தாவரக் கழிவுகள் செல்களில் சேமிக்கப்படும் இடம் - வாக்கியோல்
*  நெப்ரான் இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களை குளோமரூலஸ் மூலம் வடிகட்டுகிறது.
*  தாவரங்களில் இரவு நேரத்தில் நீர் கடத்துவதற்கு மிக முக்கியமாக கருதப்படுவது - வேரழுத்தம்.
*  நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப் பொருட்கள் - ஹார்மோன்கள்
*  வளைத்தசைப் புழுக்களில் சிறப்புக் கழிவு நீக்க உறுப்பாக செயல்படுவது - நெப்ரீடியங்கள்
*  ஒட்டுண்ணித் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு -விஸ்வம்இகஸ்குட்டா
*  சர்க்கரைக்கரைசல் ஆல்கஹாலாக மாறும் நிகழச்சி -  நொதித்தல்
*  நொதித்தலில் ஈடுபடும் நுண்ணுயிரி - ஈஸ்ட்
சுற்றுச் சூழல் பாதுகாப்பு
*  சிதைவடையும் பொருட்களைக் கொண்ட தொகுப்பு - புல், மலர்கள், தோல்
*  உணவுச் சங்கிலி - புல், ஆடு, மனிதன்
*  கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவது - பெட்ரோலியம்
*  பசுமை வேதியியலினால் உண்டாகும் பொருளுக்கு எடுத்துக்காட்டு - உயிரி பிளாஸ்டிக்
*  கார்பன்-டை-ஆக்சைடு பசுமையக வாயு வெப்பநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமாதலை ஏற்படுத்துகிறது.
*  பாக்டீரியங்கள் குளச் சூழ்நிலை தொகுப்பில் சிதைப்பவைகள் ஆகும்.
*  மேகங்களைத் தூண்டி செயற்கை மழை பெய்ய உதவும் வேதிப்பொருள் - பொட்டாசியம் அயோடைடு
*  படிம எரிபொருளுக்கு எடுத்துக்காட்டு -  கரி
*  கழிவுத் தாளை மீண்டும் எத்தனை சதவீதம் பயன்படுத்த முடியும் -  54 சதவீதம்.
*  உப்பு நீரை குடிநீராக மாற்ற பயன்படுத்தப்படும் இயற்பியல் முறை - தலைகீழ் சவ்வூடு பரவல்
*  ஹாலஜன் இல்லாத தீயணைப்பான்களில் பயன்படும் பொருள் - சிலிகான் சார்ந்த பொருள்
*  ஆசிய சிங்கம் காணப்படும் சரணாலயம் - கிர்தேசியப்பூங்கா
*  எண்ணெய் கசிவினால் கடல்நீர் மட்டத்தில் மிதக்கக் கூடிய எண்ணெய் சிதறல்கள் - தார்பந்துகள்.

*  ஜோகன் மெண்டல் - பாரம்பரிய கடத்தல்
*  பட்டாணிச் செடி - பைசம் சட்டைவம்
*  எட்வர்ட் ஜென்னர் - தடுப்பூசி
*  டாக்டர் ஐயர்ன் வில்மூட் - டாளி
*  உடல் செல்களில் ஏற்படும் மாறுபாடுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை.
*  ஊயிரிகளில் புறஅமைப்பின் மாறுபாடுகள் வேறுபாடுகளை உருவாக்குகிறது.
*  லாமார்க் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தை எடுத்துக்காட்டாக கொடுக்க காரணம் - ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து மூலம் அதிகப் பயன்பாட்டில் இருக்கும் உறுப்புகள் *  வளர்ச்சியுறும் என்பதை விளக்கினார். இம் மாற்றத்திற்கு காரணமாக விளங்குவது  தேவையும் எண்ணமுமே ஆகும்.
*  ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மைக்கு அல்லீல்கள் என்று பெயர்.
*  அல்லீல்கள் வெளிப்படுத்தும் பண்பிற்கு அல்லிலோ மார்புகள் என்று பெயர்.
*  ஆதிமனிதன் முதல் தற்கால மனிதன் வரை கொடுக்கப்பட்ட மனித இனங்களை வரிசைப்படுத்துக:
1. ஹோமியோ ஹேபிலஸ் 2. ஹோமியோ எரக்டஸ் 3. நியான்டர்தால் மனிதர்கள் 4. ஹோமோசெபியன்
*  கணையம் நொதிகளையும், ஹார்மோனையும் சுரக்கின்றது
*  தைராக்ஸின் - ஆளுமைஹார்மோன்
*  அட்ரீனலின் - அவசரக்கால ஹார்மோன்
*  ஆல்பாசெல்கள் குளுக்கோகான் ஹார்மோனையும், பீட்டாசெல்கள் இன்சுலின் ஹார்மோனையும் சுரக்கின்றன.
*  குன்றல்பகுப்பு நடைபெறும் செல்கள் இனப்பெருக்க எபிதீலிய செல்கள்
*  அமீபாவில் நடைபெறும் செல்பகுப்புமுறை - குரோமோசோம் வலைபின்னலில் மாற்றங்களை ஏற்படுத்துவது இல்லை.
*  மியாஸிஸ் செல்பிரிதலின் குறுக்கே கலத்தல் நடைபெறும் நிலை - பாக்கிடீன்
*  பிட்யூட்டரி சுரப்பி நாளமில்லா குழுவின் நடத்துநர்
*  சில நாளமில்லாச் சுரப்பிகளை பிட்யூட்டரி சுரப்பி ஒழுங்குபடுத்துகிறது.
*  பெரு மூளையின் பணிகள் - உணர்வு, அறிவுக்கூர்மை, நினைவாற்றல், கற்பனைத்திறன், காரணகாரியம், ஆய்ந்தறிதல் போன்றவற்றின் இருப்பிடமாக திகழ்கிறது.
*  தைராக்ஸின் பணிகள் - உடலின் வெப்பத்தை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்ற வீதத்தை உயர்த்துகிறது.
*  அட்ரீனல் ஹார்மோன்களின் பணிகள் - இதயத்துடிப்பின் வேகத்தை அதிகரிக்கின்றன. சுவாசவீதத்தை அதிகரிக்கின்றன.
*  ரிலாக்ஸினின் பணி - மகப்பேறின்போது இடுப்புப் பகுதித் தசைகளைத் தளர்வடையச் செய்து குழந்தை பிறப்பை எளிதாக்குகிறது.
*  உடலின் மாஸ்டர் கெமிஸ்ட் என்று சிறுநீரகம் அழைக்கப்படுவதற்கான காரணம்: சிறுநீரகம் இரத்தத்தின் வேதிபொருட்களின் சமநிலையை பேணுகிறது.
*  வெட்டும்பற்கள் - யானையின் தந்தம்
*  ரோமம் - முள்ளம்பன்றியின் முட்கள்
*  குளிரை தாங்குவதற்காக தடித்த தோலும் அடர்த்தியான முடியையும் துருவக்கரடிகள் பெற்றுள்ளன.
*  உணர்மீசா ரோமங்கள் காணப்படும் விலங்கு பூனை மற்றும் நாய்
*  மிட்ரல்வால்வு இடதுஆரிக்கிள், இடது வெண்ட்ரிக்கிள் இடையில் காணப்படுகிறது.
*  ஈரிதழ் மற்றும் மூவிதழ் வால்வின் பயன்: இரத்தம் பின்னோக்கிச் செல்வதைத் தடுத்தல்.
*  கார்டியாக் தசையினால் மனித இதயம் சுருங்கி விரிகிறது.
*  சராசரி மனிதனின் இதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 72 துடிப்புகளாகும்.
*  இதயத்தின் அறை சுருங்கும் நிலை - சிஸ்டோல்
*  இதயத்தின் அறை விரிவடையும் நிலை - டயஸ்டோல்
*  பறக்கும் தன்மையுள்ள பாலூட்டிகள் - வெளவால்
*  கடலில் வாழும் பாலூட்டிகள் டால்பின், திமிங்கலம், பென்குவின்
*  சிறுநீரகம் வெளியேற்றும் கழிவு - சிறுநீர். கழிவுப் பொருட்கள் - யூரியா, யூரிக் அமிலம்
*  நுரையீரல் வெளியேற்றும் கழிவு - வெளியேற்றப்படும் காற்று - கழிவுப்பொருட்கள் - கார்பன்டைஆக்ஸைடு, நீர் ஆவியாதல்
*  தோல் வெளியேற்றும் கழிவு - வியர்வை. கழிவுப் பொருட்கள் - அதிகமான நீர் மற்றும் உப்புகள்.
*  சுவாசித்தலில் குளுக்கோஸ் என்பது 6 கார்பன் கொண்ட சேர்மம்.
*  லாக்டிக் அமிலம் என்பது 3 கார்பன் கொண்ட கரிமச்சேர்மம்.
*  தொட்டல் சிணுங்கி - வளர்ச்சி சாரா இயக்கம்
*  தொட்டல் சிணுங்கி தாவரத்தின் நரம்பு மண்டலமோ தசைகளோ இல்லை. ஆனால் இத்தாவரத்தை தொட்டால் அனைத்து இலைகளும் சுருங்குவதற்கு காரணம் தாவரச் *  செல்களில் உள்ள நீரின் அளவில் ஏற்படும் மாறுதல் மேலும் தூண்டிலுக்கு உடனே பதில் வினை.
*  மனிதனின் சுவாக் காற்றானது நாசித்துளை வழியாக நுறையீரலுக்குள் செல்கிறது.
*  மீன்களில் நீரானது வாய் வழியாக உடலுக்குள் சென்று நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் செவுளுக்குள் பரவுகிறது.
*  சிதைவடையும் கழிவு - தோல்
*  சிதைவடையாக் கழிவு - நெகிழி
*  இராணுவ கழிவு - நிலத்தில் நிரப்புதல்
*  திரவ கழிவு - ஆழ்கிணறு பாய்ச்சுதல்
*  மருத்துவ கழிவு - எரித்து சாம்பலாக்குதல்
*  பொட்டாசியம் அயோடைடு - மேகத்தில் தூவுதல்
*  கருப்புத் தங்கம் - பெட்ரோல்
*  நெகிழி நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினால் சிதைவடையாது. எனவே இது மட்காத கழிவு ஆகும்.
*  மரக்கட்டை நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினால் சிதைவடையும் எனவே இது மட்கும் கழிவு ஆகும்.
*  கதிர்வீச்சு கழிவுகளை எரித்தல் மூலமும், நிலத்தில் நிரப்புதல் மூலமும் பாதுகாக்கப்படுகிறது.
*  நிலக்கரியை எரிக்கும்போது வெளிவரும் பசுமையக வாயு வெப்பநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
*  பசுமையக வாயுவிற்கு உதாரணம் - கார்பன்டை ஆக்சைடு
*  பசுமையாக வாயு வெளிவருவதால் காலநிலை மாறுபாட்டிற்கும், புவி வெப்பமாதலுக்கும் காரணமாகிறது.
*  ஆற்றல் உணவு மூலம் ஒரு உயிரியிலிருந்து அடுத்தடுத்த உயிரிகளுக்கு கடத்தப்படுதல் உணவுச் சங்கிலி எனப்படும்.
*  உயிரி பிளாஸ்டிக் - மக்காச் சோளம் உருளைக்கிழங்கு மற்றும் தாவரப் பொருள்களிலிருந்து தயார்க்கும் பிளாஸ்டிக் பொருள்கள்.
*  படிம எரிப்பொருள் - நிலக்கரி
*  பயோ டீசல் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது - தாவர எண்ணெய் மற்றும் கொழுப்பு
*  பயோ ஆல்கஹால் என்பது - உயிரி எரி சாராயம்
*  நச்சுத்தன்மையற்ற பாதுகாப்பான ஒரு எரிப்பொருள் - ஹைட்ரஜன்
*  மீத்தேன் வாயுவிலிருந்து உரங்கள் தயாரிக்கப்படுகிறது.
*  திட,திரவ வாயு நிலையில் உள்ள ஹைட்ரோ கார்பன் - பெட்ரோலியம்
*  நீரினால் உண்டாகும் நோய் - டைபாய்டு, காலரா, சீதபேதி
*  படிந்த மற்றும் மிதக்கும் பொருட்களை எந்த சுத்திகரிப்பு முறையில் நீக்கலாம் - முதல் நிலை சுத்திகரிப்பு
*  திரும்ப பெற இயலாத வளம் - கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு
*  சதுப்பு நிலங்களில் மீத்தேன் வாயு காணப்படுகிறது.
*  யுரேனியத்திலிருந்து அணுக்கரு ஆற்றல் தயாரிக்கப்படுகிறது.
*  டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா நோய்கள் கொசுக்களின் மூலம் பரவுகின்றன.
*  ஆற்றல் சேமிக்க உதவும் சாதனங்கள் - ஒளிரும் பல்புகள், சூரிய நீர் சூடேற்றி, மின்னணு மின் அட்டை
*  இயற்கை வளங்கள் புதுப்பிக்கத்தக்க வளங்கள்.
*  வைட்டமின்கள் - ஆற்றலை அளிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப்படுத்துகிறது.
*  நொதிகள் - ஆல்கஹால் தயாரிக்க பயன்படுகிறது.
*  கரிம அமிலங்கள் - வினிகர் உற்பத்தி செய்ய அசிட்டிக் அமிலம் பயன்படுகிறது.
*  மூலச்செல்கள் வகைகள்: 1. கருவின் மூலச்செல்கள் 2. முதிர்ந்த அல்லது உடல்மூலச்செல்கள்
*  ஸ்டெம் செல்கள் சிறப்படையாத செல்கள், மைட்டாசிஸ் முறையில் பிளவுற்று அதிக செல்களை உருவாக்கும் தன்மை கொண்டது.
*  மூலச்செல்கள் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யும் தன்மை கொண்டது. எ.கா: இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்கள்.
*  மூலச்செல்கள் - ஆய்வகத்தில் உடலுக்கு வெளியே செயற்கை முறையில் கரு உருவாக்கப்பட்டு அக்ருவில் இருந்து பெறுதல்.
*  உடல்மூலச்செல் - மனிதன் மற்றும் உயர்விலங்குகளி ல் இணைப்புத் திசு, தசைச்திசு, எலும்புமஞ்சை போன்ற வேறுபாடு அடைந்த செல்களில் உள்ள வேறுபாடு அடையாத செல்களை பிரித்து பெருகச் செய்து கிடைப்பது.
*  அக்டோபர் 15 கைகழுவும் நாளாக கொண்டாடப்படுகிறது.
கல்விசோலை உயிரியல்( click here)
ttnpsc important website ( click here)
பள்ளிசோலை ( click here)

சில பயனுள்ள இணையதளங்கள்