Monday 31 March 2014

தமிழ்நாட்டின் சிறப்புகள்


1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்

2. தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி

3. தமிழகத்தின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்

4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் - கோயம்பத்தூர்

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் - பெரம்பலூர்

6. மிக உயரமான தேசியக்கொடி மரம் - புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)

7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் - பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

8. மிகப் பெரிய தேர் - திருவாரூர் தேர்

9. மிகப்பெரிய அணைக்கட்டு - மேட்டுர் அணை

10. மிகப் பழமையான அணைக்கட்டு - கல்லணை

11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) - தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

12. மிகப்பெரிய கோயில் - தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் - ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

14. மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

15. மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)

16. மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]

17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

18. மிக நீளமான ஆறு - காவிரி (760 km)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2)

20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)

21. மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்

22. கோயில் நகரம் – மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

25. மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)....

கோள்களைப்பற்றிய குறிப்புகள்



சூரியன்

சூரியனும் ஒரு விண்மீனே. இது பூமிக்கு மிக அருகில் உள்ள விண்மீன். இது ஒரு நெருப்புக்கோளம். எனவே, இதன் அருகில் செல்லவே முடியாது. இது பூமியைப் போலப் பல மடங்கு பெரியது. பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளது.

புதன்

இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள். எனவே இது மிகவும் வெப்பமாக இருக்கும். அடுப்பின்றிச் சட்டியின்றி இதன் மேற்பரப்பில் தோசையே சுடலாம். புதனின் நிறம் பழுப்பு. இது சூரியனை ஒரு முறை சுற்றிவர 88 நாள்கள் ஆகின்றன.

வெள்ளி

சூரியனிலிருந்து இரண்டாவது கோள் வெள்ளி. இது மிகவும் வெப்பமான கோள். இதில் காரீயம் கூட உருகிவிடும். பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் இது. இதை அதிகாலையில் வானத்தில் பார்க்கலாம். சூரியனை ஒருமுறை சுற்றிவர வெள்ளிக்கு 7.5 மாதங்களாகின்றன.

பூமி

சூரியக் குடும்பத்தில் மூன்றாவது கோள்தான் நமது பூமி. இது ஒரு பாறைக்கோளம். பூமியைக் காற்று மண்டலம் சூழ்ந்துள்ளது. இதன் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீர் உள்ளது. காற்றும் நீரும் உள்ளதால் உயிரினங்கள் இங்கு வாழ முடிகிறது. பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 1/4 ஆகின்றன.

செவ்வாய்

செவ்வாய் நான்காவது கோளாகும். இதைச் சிவப்புக் கோள் என்றும் அழைப்பர். செவ்வாயின் ஒருநாள் என்பது 24.5 மணி நேரம்  செவ்வாயில் உயிரினங்கள் இருக்கக்கூடும் இதுவரை மெய்ப்பிக்கப்படவில்லை. செவ்வாய் 23 மாதங்களில் சூரியனைச்சுற்றி வருகிறது.

வியாழன்

ஐந்தாவது கோள்தான் வியாழன். இதுவே கோள்களில் மிகப்பெரியது. வியாழன் பூமியைப் போல 1300 மடங்கு பெரியது. வியாழன் வாயுக்களால் ஆனது. வியாழனில் ஒரு பெரிய சிவப்புப் பகுதி உள்ளது. மெல்லிய மங்கலான வளையம் ஒன்று வியாழனைச் சூழ்ந்துள்ளது. இவ்வளையம் பனிக்கட்டி மற்றும் தூசுகளால் ஆனது. வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றிவர 12 ஆண்டுகளாகின்றது.

சனி

சனி ஆறாவது கோள். இது இரண்டாவது பெரியகோள். வியாழனைப் போன்று சனியும் வாயுக்களால் ஆனது. சனியைச் சுற்றித் தட்டையான வட்ட வடிவமான மிகப்பெரிய வளையங்கள் உள்ளன. இவற்றை வைத்தே சனியை அடையாளம் காண இயலும்.

இந்தப் பெரிய சனிக் கோளைத் தண்ணீரில் போட்டால் மிதக்குமாம்! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஏனெனில் சனியில் உள்ள வாயுக்கள் நீரைவிட இலேசானவை. சனியின் நிறம் மஞ்சள். சூரியனை ஒருமுறை சுறறிவர 29.5 ஆண்டுகள் ஆகின்றன.

யுரேனஸ்

ஏழாவது கோள் யுரேனஸ். இதுவும் வியாழன் சனியைப் போன்று வாயுக்களால் ஆனதே. இதனைச் சுற்றியும் வளையங்கள் உள்ளன. யுரேனஸ், சூரியனை ஒருமுறை சுற்றிவர 84 ஆண்டுகள் ஆகின்றன.

நெப்டியூன்

நெப்டியூன் எட்டாவது கோளாகும். இது மிகவும் குளிர்ச்சியானது. இதைத் தொலைநோக்கியில் பார்க்கும்பொழுது நீலம் கலந்த பச்சை நிறத்தில் தெரியும். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர 165 ஆண்டுகளாகும்.

புளூட்டோ
ஒன்பதாவது கோளான புளூட்டோ தான் கடைசியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. கோள்களிலேயே மிகச் சிறியது புளூட்டோதான். புளூட்டோ சூரியனை ஒருமுறை சுற்றிவர 248 ஆண்டுகள் ஆகின்றன.

தற்போது, இது ஒரு கோள் அல்ல என்றும், கோளுக்கான தகுதி இதற்கு இல்லை என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டு ஊர்களின் சிறப்புகள்





1 பண்ருட்டி பலாப்பழம்
2 சேலம் மாம்பழம், வென்பட்டு
3 மதுரை மல்லிகைப்பூ, சுங்குடி சேலை, ஜிகர்தண்டா
4 திருவண்ணாமலை சாமந்தி பூ, அரளி பூ, குண்டு மாங்காய் ஏலக்கி வாழைப்பழம்
5 பழனி பஞ்சாமிர்தம்
6 தூத்துக்குடி மக்ரூன், உப்பு
7 கோவில்பட்டி கடலை மிட்டாய்
8 திருநெல்வேலி அல்வா
9 பரங்கிப்பேட்டை அல்வா
10 ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா
11 காரைக்குடி செட்டிநாட்டு உணவுகள்
12 தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை,தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் தட்டு, வீணை
13 காஞ்சிபுரம் பட்டுப்புடவை
14 திண்டுக்கல் பூட்டு, பிரியாணி
15 ஆம்பூர் பிரியாணி
16 சிவகாசி பட்டாசு, நாட்காட்டி
17 திருப்பூர் பனியன்
18 கும்பகோணம் பாக்குச் சீவல், வெற்றிலை
19 நாகர்கோவில் வாழைக்காய், வத்தல், நாட்டு மருந்து[மேற்கோள் தேவை]
20 மார்த்தாண்டம் தேன்
21 தேனி கரும்பு
22 ஊத்துக்குளி வெண்ணெய்
23 பத்தமடை பாய்
24 திருச்செந்தூர் கருப்பட்டி
25 வாணியம்பாடி பிரியாணி
26 பவானி ஜமக்காளம்
27 ஆரணி பட்டு
28 சிறுமலை மலைவாழை
29 நாச்சியார்கோயில் விளக்கு
30 திருப்பாச்சேத்தி அரிவாள்
31 விருதுநகர் புரோட்டா
32 சின்னாளப்பட்டி கண்டாங்கி சேலை
33 உடன்குடி கருப்பட்டி
34 மணப்பாறை முறுக்கு, உழ

VAO தேர்வு –மாதிரிகணக்குகள்



1. 3 ¼ + 5 ½ + 7 ¾ + ……………. + 23 உறுப்புகள் வரை கூடுதல்  = 644
2. 4 + 9 + 14 + ……………….. + 199 வரை கூடுதல்  = 4060
3. 3,7,11, ………….. என்ற கூட்டுதொடரில் முதல் சில உறுப்புகளின் கூடுதல்  1275
பெறுவதற்கு எத்தனை உறுப்புகள் தேவை ?= 25
4. 3+11+19+……….. + 787 ன் கூடுதல்  = 39105
5. 2,4,8, …………… என்ற பெருக்குதொடரில்  8 உறுப்புகளின் கூடுதல்  = 510
6. 54,18,6,2…………… என்ற முடிவிலி தொடரின் கூடுதல்  = 81
7. 5+25+125+…………….. 82 உறுப்புகள் வரை கூடுதல்    = 488280
8. 1^2+2^2 + ………………… + 20^2 = 2870
9. 1^3+2^3+ …………….. + 20^3 = 44100
10. 1+2+……… + 70 = ? = 2485
11. ராமன், கண்ணன்இவர்களின் வயதுகள் முறையே  18,24 எனில் அவர்களின்வயது விகிதம் என்ன ? = 3:4
12. A : B = 4:3 B : C = 5:2 எனில்  A : B : C = 20 : 15 : 6
13. 6  ஆண்கள் 15 நாட்களில் முடிப்பார் ,9 ஆண்கள் எத்தனை நாள்களில் முடிப்பர் = 10
14. ரூ.600ஐ  3:5:7  என்ற விகிதத்தில் பிரி = 120,200, 280
15. 25 : x = x : 9 எனில் x = ? = 15
16. Aயின் வருமானம்  B யின் வருமானத்தை விட  20% அதிகம் .B யின்
வாருமானம் A யின் வருமானத்தை விட எத்தனை சதவீதம் குறைவு ?- 16 2/3 %
17. 30 % of 80 / x = 24 எனில்  x = ? = X = 1
18. 35மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பின் சராசரி வயது  15 ஆண்டுகள். இவர்களுடன் ஆசிரியரை சேர்த்ததால் வயது  1 கூடுகிறது .
எனில் ஆசிரியரின் வயது . = 51
20. ஒரு சதுரத்தின் பக்க அளவு 50% அதிகரித்தால் , அதன் பரப்பளவு எத்தனை  சதவீதம் அதிகரிக்கும் = 125 %

Friday 28 March 2014

2013 நிகழ்வுகள்







2013 இல் உலகில் அதிகம் பேசப்பட்ட, அதிகம் உங்களிடையே ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ, மகிழ்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த தொகுப்பு இது.
உங்களது, ஊர் அல்லது உங்களது மாநிலம் என்ற வகையில் இல்லாது மேற்குலகம் சார்ந்த அல்லது உலக நாடுகள் சார்ந்த சில முக்கிய சம்பவங்களின் தொகுப்பே இவை.

குறித்த சம்பவங்கள் நிகழ்ந்த போது அன்றைய தினங்களில் 4தமிழ்மீடியாவில் வெளிவந்த பதிவுகளையும் உங்களுக்கு தருகிறோம்.

ஜனவரி 17, 2013 :   உலகின் மிகவும் மதிக்கத்தக்க, மிகப்புகழ்பெற்ற சைக்கிள் வீரரான லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங், தான் ஊக்கமருந்து பாவித்து வந்த உண்மையை ஒப்புக்கொண்டார். அவர் அதுவரை பெற்ற அனைத்து பதக்கங்களும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டன.

பதிவு : ஊக்க மருந்து பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்!
ஜனவரி 24, 2013 :  யுத்த களத்தில் பெண் இராணுவ வீராங்கணைகள் போர் புரிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க அரசு நீக்கியது
ஜனவரி 27, 2013 : பிரேசிலின் நைட்கிளப் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 241 பேர் கொல்லப்பட்டனர்.
பதிவு : பிரேசில் இரவு கேளிக்கை விடுதியில் தீ : 245 பேர் பலி
பெப்ரவரி 11, 2013  : அப்போது பாப்பரசராக இருந்த 7வது பெனடிக்ட் தான் திடீரென ஓய்வு பெறப் போவதாக அறிவிப்பு வெளியிட்டார். (வத்திகான் வரலாற்றில் 600 வருடங்களில், இப்படி தானே முன்வந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்த தைரியமான முதல் பாப்பரசர் இவர்)
பதிவு : பாப்பரசர் 16 வது பெனடிக்ட் பதவி விலக போவதாக திடீர் அறிவிப்பு
பெப்ரவரி 14, 2013 : உலகின் செயற்கை கால்களுடன் ஓடும் அதிவேக மின்னர் ஓட்ட வீரர் எனப் போற்றப்படும் ஒஸ்கார் பிஸ்டாரியஸ், தனது காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டார்.
பதிவு : 'பிளேட் ரன்னர்' ஆஸ்கார் பிஸ்டோரியஸ் காதலியை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் கைது
பெப்ரவரி 15, 2013 : பூமியில் மிக வேகமாக வந்து வீழ்ந்தது எரிநட்சத்திரம் : ரஷ்யாவிலிருந்த பலரால் நேரடியாக அவதானிக்கப்பட்டது.
பதிவு : அதெப்படிங்க : ரஷ்யாவில் எரிநட்சத்திரம் வீழந்ததை அவ்வளவு தெளிவாக படம்புடிச்சாங்க?

மார்ச் 13, 2013 : உலகின் புதிய பாப்பரசராக பிரான்ஸிஸ் தெரிவானார்

பதிவு : வத்திக்கானில் வெண்ணிறப் புகை - புதிய பாப்பரசராக தெரிவானார் ஆர்ஜெண்டீனாவின் கார்டினல்

ஏப்ரல் 15, 2013 : அமெரிக்காவின் புகழ்பெற்ற பாஸ்டன் மரதன் போட்டிகளின் போது அடுத்தடுத்து இரு குண்டுவெடிப்பு நிகழ்ந்து உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நாள் இதில் 3 பேர் கொல்லப்பட்டும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் போயினர்.

பதிவு : உலகப்புகழ் பெற்ற பாஸ்டன் மரதன் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பு : அதிர்ச்சியில் அமெரிக்கா

ஏப்ரல் 16, 2013 : இக்குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் ட்சார்னேவ் சகோதரர்கள் என அவர்களுடைய புகைப்படங்களுடன் அடையாளம் காணப்பட்டனர். தாமெர்லான் ட்சார்னேவ் எனும் மூத்த சகோதரர் கொல்லப்பட்டார். இளையவரான ட்ஷோகார் சுற்றுவளைப்பின் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். தான் குற்றமற்றவர் என அவர் தொடர்ந்து வாதிட்டார்.

ஏப்ரல் 24, 2013 : பங்களாதேஷில் 8 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 1,129 பேர் கொல்லப்பட்டனர்.
பதிவு :  வங்கதேச கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 147 ஆக உயர்வு
மே 06, 2013 : நான்கு தசாப்த காலத்தின் பின்னர் அமெண்டா எனும் பெண்மணி தான் கடத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இவரைப் போன்று பல பெண்களை கடத்தி சீரழித்த குற்றச்சாட்டில் அரியெல் கஸ்ட்ரோ எனும் நபருக்கு 1,000 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

மே 20, 2013 : அமெரிக்காவின் மூரில் டார்னார்டோ புயலால் 25 பேர் கொல்லப்பட்டனர்.

ஜூன் 9, 2013 : அமெரிக்காவின் புலனாய்வுத் துறை, பலரது ரகசிய தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கிறது எனும் அதிர்ச்சி தகவல்களை முதன்முறையாக உலகுக்கு வெளியிடப்பட்டவர் நான் தான் என  எட்வார்ட் ஸ்னோவ்டன் தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டது.

பதிவு : ஸ்னோவ்டெனுக்கு சீனா, ரஷ்யா அடைக்கலம் கொடுத்திருப்பதற்கு அமெரிக்கா கடும் அதிருப்தி
ஜூன் 14 - 19, 2013 : இந்தியாவின் வட மாநிலங்களில் (உத்தரபிரதேசம்) பெய்த கடும் மழை மற்றும் அதனால் வேற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 6,000க்கும் அதிகமானோர் பலியானார்கள்
பதிவு :  உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு : உயிரிழந்தோர் தொகை 500 ஐ கடந்தது
ஜூலை 03, 2013 : எகிப்து நாட்டின் அதிபர் மோர்ஸி, இராணுவ புரட்சி மூலம் திடீரென பதவியிறக்கப்பட்டார்.
பதிவு :  எகிப்து அதிபர் மோர்ஸியின் பதவி இறக்கத்தை வரவேற்ற மத்திய கிழக்கு நாடுகள்
ஜூலை 13, 2013  : அமெரிக்காவின் கறுப்பினத்தவரான எனும் நபரின் படுகொலையில் ஜோர்ச் சிம்மெர்மேன் எனும் நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டது
பதிவு :  அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு எதிராக அரங்கேறிய இன்னொரு சம்பவம்?:பல நகரங்களில் ஆர்ப்பாட்டம்
ஜூலை 22, 2013 : இங்கிலாந்தின் வருங்கால இளவரசரும், இளவரசர் வில்லியம்ஸ், கேட் தம்பதியினரின் புதல்வருமான ஜோர்ஜ் பிறந்த தினம்
பதிவு : கேட் வில்லியம் தம்பதியரின் புதிய அரச வாரிசின் பெயர் ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ்

ஆகஸ்டு 21, 2013 : அமெரிக்கா இராணுவம் ஈராக்கில் மேற்கொண்ட மனித உரிமை மீறல் குற்றங்களை விக்கிலீக்ஸ் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அமெரிக்க இராணுவ வீரர் பிராட்லி மேன்னிங்கிற்கு 35 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

பதிவு : கேட் வில்லியம் தம்பதியரின் புதிய அரச வாரிசின் பெயர் ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ்

ஆகஸ்டு 21, 2013 : சிரிய போரின் போது இடம்பெற்ற  நச்சுவாயுத்தாக்குதலில் 1,429 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவார்கள். இத்தாக்குதல் தம்மால் நிகழ்த்தப்படவில்லை என சிரிய அதிபர் அசாத்தின் படைகள் மறுப்பு தெரிவித்தன.

பதிவு : சிரியா மீது போர் தொடுக்க மேற்குலக நாடுகள் திட்டம்:ஈரான் கண்டனம்

செப்டெம்பர் 13, 2013 : இந்தியாவை அதிரச்செய்த  டெல்லி மருத்துக் கல்லூரி மாணவியின்  பேருந்து பாலியல் பலாத்காரம் தொடர்பிலான  குற்றவாளிகள் நால்வருக்கும் மரணதண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. எனினும் இந்தியாவில் ஒவ்வொரு 21 நிமிடத்திற்கும் ஒரு தடவை ஒரு பெண் பாலியல் ரீதியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார், அல்லது ஆசிட் வீச்சுக்கு உள்ளாகிறார்.

பதிவு : டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை விதித்தது நீதிமன்றம்

செப்டெம்பர் 16, 2013 : அமெரிக்க வாஷிங்டன் கடற்படைத் தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர்

பதிவு : வாஷிங்டன் கடற்படை கட்டுப்பாட்டுத் தளத்தில் துப்பாக்கிச் சூடு : 12 பேர் பலி

செப்டெம்பர் 21, 2013 : கென்யாவின் வர்த்தக மையத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டனர்

பதிவு : வாஷிங்டன் கடற்படை கட்டுப்பாட்டுத் தளத்தில் துப்பாக்கிச் சூடு : 12 பேர் பலி

அக்டோபர் 4, 2013 : இந்தியாவின் ஆந்திர பிரதேஷ், ஒடிசாவில் ஏற்பட்ட மிகப்பயங்கரமான பைலின் புயலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 1999ம் ஆண்டு ஒடிசாவில் ஏற்பட்ட புயலின் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட இரண்டாவது மிகப் பாரிய புயலாக உருவான போதும்,  முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பத்திரமாக இடம்பெயரச் செய்யப்பட்டதால் பலர் கொல்லப்படுவது தவிர்க்கப்பட்டது.  

பதிவு : துவம்சம் செய்தது பைலின் புயல் : இருளில் மூழ்கியது ஒடிசா
அக்டோபர் 17, 2013 : அமெரிக்க அரச அதிகாரிகளின் 16 நாள் திடீர் வேலைப் புறக்கணிப்பு முடிவுக்கு வந்ததுடன், அமெரிக்க அரசு மறுபடி இயங்கத் தொடங்கியது
பதிவு : அமெரிக்க அரசு துறை முடக்கம் : மலேசியா, பிலிப்பைன்ஸ் சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்தார் ஒபாமா!

நவம்பர் 5, 2013 : செவ்வாய்க்கிரகத்தை நோக்கி இந்தியா அனுப்பிய மங்கல்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்ட நாள். ரூ.450 கோடி செலவில், இந்தியாவின் இஸ்ரோ உருவாக்கிய இத்திட்டத்தின் படி செவ்வாய்க்கு செலுத்தப்பட்ட விண்கலம், 9 மாத பயணத்தின் பின்னர், செப்டெப்ம்பர் 24, 2014 இல் செவ்வாய்க் கிரகத்தை சென்றடையவுள்ளது. இது வெற்றிகரமாக செவ்வாய்க்கிரகத்தை சென்றடைந்தால் நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் என்பவற்றை அடுத்து செவ்வாய்க்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய நான்காவது விண்வெளி நிலையமாக இந்தியாவின் இஸ்ரோ புதிய சாதனை படைக்கும். இப்போதே குறித்த விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் இந்தியாவின் இத்திட்டத்திற்கு உலகளவில் கடும் விமர்சனமும் எழுந்திருந்தது.

வெறுமனே பணத்தை வீணடிக்கும் முயற்சி இது. இத்திட்டத்திற்கு செலவழித்த பணப் பெறுமதியை இஸ்ரோ தனது, தொலைத்தொடர்பாடல், ஒளிபரப்பு, காலநிலை முன்னறிவிப்பு, இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான எச்சரிக்கை, கடல்  கண்காண்பிப்பு எச்சரிக்கை, கல்வி, பாதை வடிவமைப்பு போன்ற செய்மதிகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்கின்றன அந்த விமர்சனங்கள். காரணம், இஸ்ரோவின் வருடாந்திர பட்ஜெட் ஒரு பில்லியன் டாலர், ஆனால் நாஸாவின் வருடாந்திர பட்ஜெட் 17.7 பில்லியன் டாலர்களாக இருப்பதுடன்,  ரஷ்ய ஏஜென்ஸியின் பட்ஜெட் 7.9 பில்லியன் டாலர்களாக உள்ளது.
பதிவு : செவ்வாயை நோக்கி மங்கல்யான் சற்று முன்னர் வெற்றிகரமாக தமது பயணத்தை தொடங்கியது!

நவம்பர் 8, 2013 : பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட ஹையான் தைபூனில் 6,000 பே கொல்லப்பட்டனர்.

பதிவு : பிலிப்பைன்ஸ் ஹையான் புயல் : 10 ஆயிரத்துற்கும் மேற்பட்டோர் பலி?

நவம்பர் 23, 2013 : 1979ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா - ஈரான் இடையே முதன்முறையாக அணு ஒப்பந்தம் ஒன்று நேரடி பேச்சுவார்த்தையின் பின்னர் கையெழுத்தானது.

டிசம்பர் 05, 2013 : 20ம் நூற்றாண்டின் Living Legend என அழைக்கப்பட்ட மாபெரும் கறுப்பினத் தலைவரும், நிறவெறிக்கு எதிராக போராடி வெற்றி கண்ட தென் ஆபிரிக்காவின் முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலா காலமானார்.

பதிவு : அமைதிப் புரட்சியின் அடலேறே சென்று வா!
டிசம்பர் 8, 2013 : டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் ஐந்து  மாநிலத் தேர்தல்கள் முடிவுகள் வெளியாகின. காங்கிரஸ் கடும் பின்னடவைச் சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக இந்தியத் தலைநகர் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக டெல்லியில் ஆட்சி அமைக்கிறது. அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறா